உக்கிரமடையும் கிருமிப்பரவல்; தமிழ்நாட்டில் 2,089 பேர் பாதிப்பு

உக்கிரமடையும் கிருமிப்பரவல்; தமிழ்நாட்டில் 2,089 பேர் பாதிப்பு

2 mins read
9412074e-59e1-4b68-b159-a6510d217f67
-

சென்னை: தமி­ழ­கத்­தில் படிப்­படி யாக கட்­டுக்­குள் வந்­து­கொண் டிருந்த கொரோனா கிருமி பாதிப்பு, கடந்த ஐந்து மாதங்­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் இப்­போது 2,000 பேரைக் கடந்து உக்­கி­ர­ம­டைந்­துள்­ளது.

தமி­ழக சுகா­தா­ரத்­துறை வெளி யிட்­டுள்ள அறிக்­கை­யின்­படி, "தமி­ழ­கத்­தில் கடந்த 24 மணி நேரத்­தில் 2,089 பேர் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது. இத­னால் பாதிக் கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 8,77,279ஆக அதி­க­ரித்­துள்­ளது.

"இத்­தொற்­றுக்குச் சிகிச்சை பெற்ற 1,241 பேர் குணம்­பெற்று வீடு திரும்­பினா். இவர்­க­ளை­யும் சேர்த்து இது­வரை 8,52,463 பேர் குணம் பெற்­றுள்­ள­னர்.

"சனிக்­கி­ழமை சிகிச்சை பல னின்றி ஒன்­பது பேர் உயி­ரி­ழந்­த­னர். இவர்­க­ளை­யும் சேர்த்து 12,659 பேர் உயி­ரி­ழந்துள்­ள­னர்.

"தற்­போ­தைய நிலை­யில் 12,157 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். அதி­க­பட்­ச­மாக சென்­னை­யில் சனி­யன்று 775 பேருக்கு இப்­பா­திப்பு கண்­ட­றி­யப்­பட்­டது. இது­வரை இங்கு இத்­தொற்­றால் பாதிக்­கப்பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 2,44,686ஆக அதி­க­ரித்­துள்­ளது. சென்­னை­யில் 4,785 பேர் இப்­பா­திப்­புக்குச் சிகிச்சை பெறு­கின்­ற­னர்.

இரண்­டா­வது அலை கார ணமாக தமி­ழ­கத்­தில் கிருமி பாதிப்பு கடு­மை­யாக அதி­க­ரித்து வரு­கிறது. முகக்­க­வ­சம் அணி­வதை பல­ரும் பெரி­தாக விரும்­பாத கார­ணமே பாதிப்பு இந்த அளவு மீண்­டும் அதி­க­ரிக்க கார­ணம் என்­றும் கூறப்­ப­டு­கிறது. முதல் அலை­யை­விட இரண்­டா­வது அலை­யின் தாக்­கம் எப்­படி இருக்­கப்போகி­றதோ என்ற அச்­ச­மும் மக்­க­ளி­டம் அதி­க­ரித்து வரு­கிறது.

கொரோனா நோயா­ளி­கள் வாக்­க­ளிக்க சிறப்பு ஏற்­பாடு

கிரு­மிப்­ப­ர­வ­லால் பாதிக்­கப்­பட்ட வர்­கள் வாக்­க­ளிக்க ஏது­வாக, சிறப்பு ஏற்­பா­டு­கள் செய்­யப்பட்­டுள்­ள­தாக தேர்­தல் ஆணை­யம் கூறி­உள்­ளது.

இது­கு­றித்து ஆணை­யம் விடுத்­துள்ள செய்­திக்குறிப்­பில், "வாக்­குச்­சா­வ­டி­களில் 15 முழு கவச உடை­கள், முகக் கவ­சங்­கள் தயார் நிலை­யில் வைக்­கப்­படும். இப்பணிக்­காக ஒரு வாக்­குச்­சா­வ­டிக்கு இரு­வர் என்ற கணக்­கில் 12,000 தன்­னார்­வ­லர்­கள் நிய­ம­னம் செய்­யப்­பட்­டுள்­ள­னர்," எனத் தெரி­வித்­துள்­ளது.