சென்னை: தமிழக மக்கள் அனை வரும் எனக்கு சகோதர, சகோதரிகள்தான் என்று கூறியுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த தமிழகம் இல்லாமல் இந்தியாவே இல்லை என்றும் புகழாரம் சூட்டினார்.
"நாம் ஒரு மடங்கு அன்பு காட்டினால் தமிழர்கள் பன்மடங்கு அன்பைக் காட்டுவார்கள் என்பது எனக்குத் தெரியும்.
"நான் பிறப்பால் தமிழன் இல்லை என்றாலும் தமிழக மக்க ளின் உணர்வுகளை நன்கு உணர்ந்தவன். தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்," என்று அவர் மேலும் கூறினார்.
"நான் தமிழ்ெமாழியைக் கற்கவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன்.
"தமிழச்சி தங்கபாண்டியனின் கவிதைகளைப் படித்துள்ளேன்," என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஒன்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும் மற்றொன்று ஆட்சிக் கட்டிலில் அமரவும் ஒன்றின் மீது மற்றொன்று கடும் விமர்சனங்களைச் செய்து வருகின்றன.
அத்துடன், அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் தங்களது பிரசாரங்களையும் வாக்கு சேகரிப்புகளையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.
சென்னை வேளச்சேரி தொகுதி யில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஹசன் மௌலானா, சைதாப்பேட்டை திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன், திருப்பெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகை, சோளிங்கர் காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்தினம் ஆகியோரை ஆதரித்து சென்னையில் அவர் பிரசாரம் செய்தார்.
திமுக-காங்கிரஸ் அமைத்துள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மூலம் தமிழகத்திற்கு புதிய சிந்த னைகள், வழிமுறைகளை வழங்க முடியும் எனக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, இந்த தேர்தலில் இந்தக் கூட்டணி வெற்றிபெற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

