ஆ.ராசா உருவ பொம்மையை எரித்து மக்கள் போராட்டம்

ஆ.ராசா உருவ பொம்மையை எரித்து மக்கள் போராட்டம்

1 mins read
25b26473-a735-4b5a-9e75-ff27895398e3
-

சேலம்: முதல்­வர் பழ­னி­சாமி குறித்து அவ­தூ­றா­கப் பேசி­ய­தாக திமுக எம்.பி. ஆ.ராசா மீது அதி­மு­க­வி­னர் அளித்த புகா­ரைத் தொடர்ந்து மூன்று பிரி­வு­களில் மத்­திய குற்­றப்­பி­ரிவு போலி­சார் வழக்­குப் பதிவு செய்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், முதல்­வர் பழனி சாமியை அவ­தூ­றா­கப் பேசி­ய­தாக திமுக எம்.பி. ஆ.ராசாவைக் கண்­டித்து சேலத்­தில் அதி­மு­க­வி­னர் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். முதல்­வ­ரின் தொகு­தி­யான எடப்­பாடியிலும் அதி­மு­க­வி­னர் கறுப்­புக்­கொடி பேர­ணி­யில் ஈடு­பட்­ட­னர்.

ராசா­வின் உருவ பொம்­மையை எரித்து அண்ணா தொழிற்­சங்கத்­தி­னர் அய­னா­வ­ரத்­தில் தங்­க­ளது எதிர்ப்பை பதிவு செய்­த­னர். இது போன்ற போராட்­டங்­கள் மாநி­லம் எங்­கும் நடத்­தப்­பட்டு வரு­கிறது.

அண்­மை­யில் பிர­சா­ரத்­தில் பேசிய ஆ.ராசா, திமுக தலை­வர் மு.க.ஸ்டா­லி­னை­யும் முதல்­வரையும் ஒப்­பிட்­டுப் பேசி­னார்.

"ஸ்டா­லின் படிப்­ப­டி­யாக வளர்ந்து முதல்­வர் வேட்­பா­ள­ரா­க­வும் நாளைய முதல்­வ­ரா­க­வும் வர­வுள்­ளார். அவர் முறை­யா­கப் பிறந்­த­வர் என்­றும் செல்வி ஜெய­ல­லிதா மறை­வுக்­குப் பின்­னர் எடப்­பாடி பழ­னி­சாமி குறுக்கு வழி­யில் அதி­கா­ரத்­திற்கு வந்­த­வர்," என்­றும் விமர்­சித்திருந்­தார்.

ஆ.ராசா­வின் இந்த சர்ச்சை பேச்­சைக் கண்­டித்து தமி­ழ­கம் முழு­வ­தும் போராட்­டம் நடத்­திய அதி­மு­க­வி­னர், தேர்­தல் ஆணையத்­தி­லும் புகார் அளித்­தி­ருந்­த­னர்.