சென்னை: தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் போட்டியிடும் போடி தொகுதிக்குச் சென்ற முதல்வர் இபிஎஸ் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
அப்போது ஓபிஎஸ்ஸை முதல்வர் புகழ்ந்து தள்ளினார்.
போடி தொகுதிக்காக துணை முதல்வர் நிறைவேற்றிய திட்டங்கள் அனைத்தையும் வரிசையாக இபிஎஸ் பட்டியலிட்டார்.
"இறைவனால் உங்களுக்கு அருளப்பட்ட கொடைதான் அண்ணன் ஓபிஎஸ். அவர் எங்களுக்கும் கிடைத்த பெரும் பாக்கியம்," என்று புகழ, அருகில் நின்ற ஓபிஎஸ்ஸும் உருகிவிட்டார்.
பிறகு சுப்புராஜ் நகரில் உள்ள தனது வீட்டுக்கு இபிஎஸ்சை ஓபிஎஸ் அழைத்துச் சென்றார்.
அப்போது இரவு 9:00 மணி. ஓபிஎஸ்சின் இரு மகன்கள், மருமகள்கள், பேரப் பிள்ளைகள் என எல்லோரும் முதல்வரை வரவேற்றனர். வீட்டில் நடமாட முடியாமல் அமர்ந்திருந்த தாய் பழனியம்மாவை துணை முதல்வர் முதல்வருக்கு அறிமுகம் செய்தார்.
"முதலமைச்சர் பழனிசாமி வந்திருக்கார்," என்று அம்மாவிடம் ஓபிஎஸ் சொல்ல, பழனியம்மாள் கை உயர்த்தி ஆசி வழங்கினார்.
காலைத் தொட்டு வணங்கிய முதல்வருக்கு அவர் திருநீறு பூசி வாழ்த்தினார். அந்தப் படம் தற் போது வெளியாகி சமூக ஊடகங் களில் வேகமாகப் பரவி வருகிறது. அதிமுகவில் கோஷ்டி பூசலை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்துள்ள வேளையில் இந்தப்படம் அதிமுகவினருக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.

