பெங்களூரு நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

பெங்களூரு நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

2 mins read
42640ae9-5c7b-47b1-9cbf-ca415a2cc6a4
-

பெங்­க­ளூரு: போலி­யான ஆவ­ணங்­களை வழங்கி கடன் வாங்க உத்­த­ர­வா­தம் அளித்­த­தாக நடி­கர் ரஜினிகாந்த் மனைவி லதா மீது பெங்களூரு நீதிமன்றத்தில் குற்­றப் ­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

நடி­கர் ரஜி­னி­காந்­தின் மகள் இயக்­கிய கோச்­ச­டை­யான் படத்தை மீடியா ஒன் குளோ­பல் நிறு­வ­னம் தயா­ரித்­தது.

பணம் போத­வில்லை என்­ற­தும் மீடியா ஒன் குளோ­பல் நிறு­வ­னம் கடன் வாங்க முயற்சி செய்­தது. இதற்­காக நடி­கர் ரஜி­னி­காந்­தின் மனைவி லதா­வி­டம் மீடியா ஒன் குளோ­பல் நிறு­வ­னம் உதவி கேட்­டது. அதற்கு லதா ரஜி­னி­காந்த், பல்­வேறு ஆவ­ணங்­க­ளைக் கொடுத்து ஆட் பியூரோ என்ற நிறு­வ­னத்­தி­டம் கடன் வழங்க பரிந்­துரை செய்ததாகக் கூறப்படுகிறது.

லதா வழங்­கிய ஆவ­ணங்­களை ஏற்று கொண்டு ஆட் பியூரோ நிறு­வ­னம் ரூ.6.84 கோடி கடன் வழங்­கி­யது. ஆனால் அந்­தக் கடனை திரும்ப செலுத்த முடி­யா­மல் மீடியா ஒன் குளோ­பல் நிறு­வ­னம் திண­றி­ யது.

இது குறித்து லதா ரஜி­னி­காந்­தி­டம் கேட்­ட­போது அவர் மறுப்பு தெரி­வித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து ஆட் பியூரோ நிறு­வ­னம், ''லதா ரஜி­னி­காந்த் வழங்­கிய ஆவ­ணங்­கள் அனைத்­தும் போலி­யா­னவை. இத­னால் எங்­க­ளுக்கு ரூ.6.84 கோடி இழப்பு ஏற்­பட்­டுள்­ளது. அந்த பணத்தை லதா ரஜி­னி­காந்த் வழங்­க­வேண்­டும்,'' என்று பெங்­க­ளூரு அல்­சூர்­கேட் போலி­சில் புகார் அளித்­தது.

இதை­ய­டுத்து லதா ரஜி­னி­காந்த் மீது போலி­சார் வழக்­குப் பதிவு செய்­துள்­ள­னர். இந்த வழக்கு விசா­ரணை பெங்­க­ளூரு 2வது ஏசி­எம்­எம் நீதி­மன்­றத்­தில் நடந்து வந்­தது. இந்த நிலை­யில் நேற்று முன்­தி­னம் வழக்­குத் தொடர்­பான குற்­றப்­பத்திரி­கையை நீதி­மன்­றத்­தில் போலி­சார் தாக்­கல் செய்­துள்­ள­னர்.