மதுரை: வாக்குக்குப் பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்குகிறார்கள். 1,500 மற்றும் 2,000 ரூபாய் பணத்திற்கு ஆசைப்பட்டால் நாடு நாசமாகி விடும். ஆடு, மாடு வாங்குவதுபோல் பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்க துடிக்கிறார்கள். வெளிப் படையான ஆட்சி தமிழகத்தில் நடக்க வேண்டும் என்றால் அமமுகவை ஆதரியுங்கள். தமிழின துரோகிகளை இந்த ஆட்சியில் தொடரவிடக் கூடாது என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி பிரசாரக் கூட்டத்தில் பேசிய தினகரன் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
'வாக்குக்கு பணம் பெற்றால் நாடு நாசமாகும்'
1 mins read
-

