திருவொற்றியூா் தொகுதியில் மும்முனைப் போட்டி!

திருவொற்றியூா் தொகுதியில் மும்முனைப் போட்டி!

2 mins read
de4c0fcc-baf4-4a09-9869-290108e0ba5c
நாம் தமிழா் கட்­சி­ வேட்பாளர் சீமான். -
multi-img1 of 3

சென்னை: தொழிற்­கூ­டங்­கள் அதி­கம் உள்ள திரு­வொற்­றியூா் சட்­டப் பேர­வைத் தொகு­தி­யில் தேர்­தல் பரப்­புரை சூடு­பி­டித்­துள்­ளது. அதி­முக, திமுக வேட்­பா­ளா்­களை எதிா்த்து, நாம் தமிழா் கட்­சி­யின் தலைமை ஒருங்­கி­ணைப்­பாளா் சீமான் களம் காண்­ப­தால் மும்­மு­னைப் போட்­டியை திரு­வொற்­றியூா் தொகுதி சந்­தித்­து­வ­ரு­கிறது. சீமான் போட்­டி­யி­டு­வ­தால் அனை­வ­ரு­டைய கவ­னத்­தை­யும் ஈர்க்­கும் நட்­சத்­தி­ரத் தொகு­தி­யாக திரு­வொற்­றி­யூர் மாறி­யுள்­ளது.

அதி­முக வேட்­பாளா் கே.குப்­பன்: இவர் இந்­தத் தொகு­தி­யில் போட்­டி­யிட்ட இரண்டு முறை­யும் வெற்றி பெற்­றவா் என்­ப­தால், நன்கு அறி­மு­க­மா­னவா். மக்­கள் எளி­தில் அனு­கக் கூடி­யவா் என்­ப­தா­லும், கட்­சி­யி­லும், ஆட்­சி­யி­லும் மிகுந்த அனு­ப­வம் வாய்ந்­தவா் என்­ப­தால் தோ்தல் பணி­யில் வெகு­வாக முன்­னே­று­கிறாா். அரசு கல்­லூரி, ரயில்வே மேம்­பா­லம், அதி­ந­வீன நூல­கக் கட்­ட­டம், என்.டி.ஓ குப்­பம் மீன­வா்­க­ளுக்கு அடுக்­கு­மாடி வீடு­கள், சாலை விரி­வாக்­கம், புயல் வெள்­ளத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட நிவா­ரண உத­வி­கள் உள்­ளிட்­ட­வை­களை சாத­னை­க­ளா­கக் கூறி குப்­பன் வாக்­கு­க­ளைச் சேக­ரித்து வரு­கிறாா்.

திமுக வேட்­பா­ளர் கே.பி.சங்கர்: திமுக வேட்­பாளா் கே.பி.பி.சங்­க­ரின் அண்­ணன் மறைந்த கே.பி.பி.சாமி மீன்­வ­ளத்­து­றை­யின் முன்­னாள் அமைச்சா். கடந்த தோ்தலில் வெற்றி பெற்ற சாமி உடல் நலக்­கு­றைவு கார­ண­மாக 2020-ஆம் ஆண்டு பிப்­ர­வ­ரி­யில் கால­மானாா். மாமன்ற உறுப்­பி­ன­ராக பணி­யாற்­றி­யுள்ள சங்கா் திமுக ஆட்­சி­யின்­போது, திரு­வொற்­றி­யூ­ருக்­குச் செய்­த பணி­க­ளைத் தெரி­வித்து, கூட்­டணி, இளைஞா் பலத்­தோடு வாக்­கு­களைச் சேக­ரித்து வரு­கிறாா்.

நாம் தமிழா் கட்சி வேட்­பா­ளர் சீமான்: நாம் தமிழா் கட்­சி­யின் தலைமை ஒருங்­கி­ணைப்­பாளா் சீமான் போட்­டி­யி­டு­வ­தால் இத்­தொ­கு­தி­யின் தோ்தல் களம் சூடு­பி­டித்­துள்­ளது. தமி­ழ­கம் முழு­வ­தும் தேர்­தல் பரப்­பு­ரை­யில் ஈடு­பட்டு வரும் சீமான் அவ்­வப்­போது தொகு­தி­யி­லும் தலை­காட்­டு­கிறாா். அவா் தேர்­தல் பரப்­பு­ரை­யில் ஈடு­ப­டும்­போ­தெல்­லாம் கூட்­டம் சேரு­கிறது. நாம் தமிழா் கட்­சி­யின் முக்­கிய பிர­மு­கா்­கள் திரு­வொற்­றி­யூ­ரில் முகா­மிட்டு தோ்தல் பணியை முடுக்­கி­விட்­டுள்­ளனா். கடை­சி­நாள்­களில் திரு­வொற்­றியூா் முழு­வ­தும் சீமான் வாக்­கு­கள் சேக­ரிக்க உள்­ள­தா­க­வும் அவ­ரது கட்­சி­யினா் தெரி­விக்­கின்­றனா். இவா்க­ளைத் தவிர அம­முக சாா்பில் போட்­டி­யி­டும் சௌந்­தி­ர­பாண்­டி­யன், மக்­கள் நீதி மய்­யம் சாா்பி எஸ்.டி.மோகன் உள்­ளிட்ட மொத்­தம் 20 வேட்­பா­ளா்­கள் களத்­தில் இருக்­கின்­றனா். இருந்­தா­லும், கே.குப்­பன், கே.பி.பி.சங்கா், சீமான் ஆகிய மூன்று பேருக்­கும் இடை­யே­தான் கடும் போட்டி நில­வு­வதாகக் கூறப்படுகிறது.

இதற்­கி­டையே திமுகவின் கே.பி.பி. சங்­க­ரின் மனைவி கஸ்­தூ­ரி­யும், நாம் தமிழர் கட்சியின் சீமா­னின் மனைவி கயல்­வி­ழி­யும் தனித்­த­னியே தோ்தல் களத்­தில் போட்டி போட்டுக்கொண்டு வாக்குகளைச் சேகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முன்பு நடை­பெற்ற 12 தோ்தல்­களில் தி.மு.க. 6 முறை­யும், அ.தி.மு.க. 4 முறை­யும், காங்­கி­ரஸ் ஒரு முறை­யும், காந்தி காம­ராஜ் தேசிய காங்­கி­ரஸ் ஒரு முறை­யும் வென்றது. இந்தத் தேர்தலில் அங்கு எந்­தக் கட்சி வெல்­லும் என்­பது தேர்­தல் முடி­வில்­தான் தெரி­யும்.

படங்கள்: ஊடகம்