தமிழ்நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

தமிழ்நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

1 mins read
e331ce1c-c234-43d8-a232-936a889eb9fd
-

சென்னை: ஜன­வரி மாதம் 16ஆம் தேதி இந்­தி­யா­வில் தடுப்­பூசி போடும் பணி முடுக்­கி­வி­டப்­பட்­டது. முத­லில் சுகா­தார ஊழி­யர்­க­ளுக்கு ஊசி போடப்­பட்­டது.

பிப்­ர­வரி 2ஆம் தேதி முதல் முன் களப்­ப­ணி­யா­ளர்­க­ளுக்குத் தடுப்­பூசி போடும் பணி நடந்­தது.

மார்ச் 1ல் இருந்து 60 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்­கும், 45 வய­துக்கு மேற்­பட்ட பல்­வகை நோய்த் தாக்­கு­த­லால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்­பூசி போடப்பட்டது.

இது­வரை நாடு முழு­வ­தும் 7 கோடி பேருக்கு மேல் தடுப்­பூசி போட்­டுக்கொண்டுள்ளனர். தொடர்ந்து தடுப்­பூசி போடும் பணி தீவி­ர­மாக நடந்து வரு­கிறது. இதுவரை சென்னையில் 7.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த நிலை­யில் இன்று ஏப்­ரல் 1 முதல் 45 வய­துக்கு மேற்­பட்ட அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி போடும் பணி நடக்­கிறது.

இதற்­காக தடுப்­பூசி நிலை­யங்­கள் நாடு முழு­வ­தும் அதி­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்த நிலை­யில், நாளை 2ஆம் தேதி கூடு­த­லாக 12 லட்­சம் கோவி­ஷீல்டு மருந்­து­கள் சென்­னைக்கு வர­வ­ழைக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கத் தெரி­கிறது.