கோவை: கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி, மக்களின் பசிப்பிணியைத் தீர்த்து வரும் 'இட்லி பாட்டி' கமலாத்தாளுக்கு மஹிந்திரா நிறுவனம் சொந்த வீடு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
கோவை ஆலந்துறையை அடுத்த வடிவேலாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கமலாத்தாள். 87 வய தான இவருக்கு சொந்தமாக நிலம் வாங்கி, அதை அவரது பெயரில் பதிவு செய்துள்ளது மஹிந்திரா நிறுவனம்.
அத்துடன், அந்த நிலத்தில் கமலாத்தாளுக்கான வீட்டையும் இட்லிக் கடை நடத்துவதற்கான கட்டுமானத்தையும் அந்நிறுவனம் தொடங்கியுள்ளது.
அண்ைமயில் கமலாத்தாளைப் பற்றி மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில், கோவையில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி என மலிவான விலையில் விற்பனை செய்து ஏழை எளிய மக்களின் பசியாற்றி வரும் கமலாத்தாள் குறித்து பாராட்டி புகழ்ந்திருந்தார்.
இந்தப் பதிவின் காரணமாக சமூக வலைத்தள வாசிகளிடையே இவர் பிரபலமடைந்தார். அவரது சேவையும் பெரும் பாராட்டைப் பெற்றது. இதையடுத்து கோவையில் இயங்கி வரும் பாரத் கேஸ் நிறுவனம், உடனடியாக கமலாத்தாளுக்கு இலவச கேஸ் அடுப்பு வழங்கியது.