வீடு தேடி வரும் தடுப்பூசி

வீடு தேடி வரும் தடுப்பூசி

2 mins read
4913c14c-009e-448f-8aa2-27bddfb1c76a
கிருமிப் பரவல் 2வது அலை வேகம் எடுத்துள்ளதால் பொதுமக்களிடையே பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மன்னார்குடி அரசு மருத்துவமனை மற்றும் மகப்பேறு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். படம்: இந்திய ஊடகம் -

கோவை: கோவை மாட்­டத்­தில் வீடு­க­ளுக்­குச் சென்று தடுப்­பூசி போடும் திட்­டம் தொடங்­கப்­பட்­டுள்­ளது. அந்த மாவட்­டத்­தில் கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க மாவட்ட நிர்­வா­கம் மற்­றும் சுகா­தாரத் துறை­யி­னர் தீவிர நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­ற­னர்.

இதன் ஒரு பகு­தி­யாக வீடு­க­ளுக்­குச் சென்று தடுப்­பூசி போடப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பாக பேசிய கோவை மாந­க­ராட்சி அதி­காரி ஒரு­வர், "கோவை மாந­க­ராட்­சி சுகா­தா­ரத்­து­றை­யின் கீழ் உள்ள 32 நகர்ப்­புற ஆரம்ப சுகா­தார நிலை­யங்­கள் மூலம் இது­வரை 50,227 பேருக்கு தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது," என்­றார்.

இந்த நிலை­யில் கொரோ­னா­வுக்­குக் கடி­வா­ளம் போட இம்­மா­தம் 11ஆம் தேதி­யி­லி­ருந்து (இன்று) நட­மா­டும் தடுப்­பூ­சித் திட்­டத்தை தொடங்­க­வுள்­ளோம்.

"குறிப்­பிட்ட அளவு தடுப்­பூ­சியை பொது­மக்­கள் வசிக்­கும் தெருக்­க­ளுக்கு எடுத்­துச் சென்று போடும் பணியை தொடங்­கி­யுள்­ளோம். இதற்கு பொது­மக்­கள் ஒத்­து­ழைப்பு அளிக்க வேண்­டும்," என்று அந்த அதி­காரி கேட்­டுக் கொண்­டார்.

இது­வரை கொரோ­னா­வுக்கு எதி­ராக எடுக்­கப்­பட்­டுள்ள நட­வடிக்­ கை­யை­யும் அவர் விவ­ரித்­தார்.

"மாந­க­ராட்சி பகு­தி­களை பொறுத்­த­வரை கடந்த 4 நாட்­க­ளாக 180 முதல் 220 பேர் வரை கொரோனா தொற்று பாதிப்­புக்கு உள்­ளா­கின்­ற­னர்.

"ஒரு தெரு­வில் மூன்று பேருக்கு மேல் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தால் வீடு­களை ஒருங்­கி­ணைத்து தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட பகு­தி­யாக அறி­விக்­கி­றோம்.

தற்­போது வரை மாந­க­ரில் 41 இடங்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட பகு­தி­யாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

"கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் சிகிச்சை பெறு­வ­தற்­காக காருண்யா உயர் கல்வி நிலை­யம், பார­தி­யார் பல்­க­லைக் கழ­கம் மற்றும் கொடி­சியா வளா­கத்­தில் மையங்­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

"பார­தி­யார் பல்­க­லைக் கழக தங்­கும் விடு­தி­யில் 420 பேர் தங்கி சிகிச்சை பெறும் வகை­யி­லும் கொடி­சி­யா­வில் 400 படுக்கை வச­தி­யு­ட­னும் சிகிச்சை மையம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

தேவைப்­பட்­டால் கொடி­சி­யா­வில் 2,000 பேர் வரை தங்க வைக்க முடி­யும். தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் படுக்கை எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது," என்று அதிகாரி தெரிவித் தார்.