முகக்கவசம் இனி கட்டாயம்

முகக்கவசம் இனி கட்டாயம்

1 mins read
18cbb693-7708-4fe7-acc6-341407637f89
-

சென்னை: கிரு­மித்­தொற்றுப் பர­வ­லைக் கட்­டுக்­குள் வைக்க தமி­ழக அரசு நேற்று முதல் பல்­வேறு கட்­டுப்­பா­டு­களை அமல்­ப­டுத்­தி­யது.

இதன்­படி பொது­மக்­கள் அனை­வ­ரும் முகக்கவ­சம் அணி­வது கட்­டா­யம் ஆக்­கப்­பட்­டுள்­ளது. முகக்­க­வ­சம் அணி­யா­விட்­டால் ரூ.200 அப­ரா­தம் விதிக்­கப்­படும் என்­றும் பொது இடங்­களில் எச்­சில் துப்­பி­னால் ரூ.500 அப­ரா­தம் என்­றும் எச்­ச­ரிக்­கப்பட்­டுள்­ளது.

மேலும் திரு­வி­ழாக்­கள், மதம் சார்ந்த கூட்­டங்­க­ளுக்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. தமி­ழ­கம் முழு­வ­தும் நோய் கட்­டுப்­பாட்டு பகு­தி­களில் தற்­போ­துள்ள நடை­மு­றை­க­ளின்­படி எந்­த­வி­த­மான தளர்­வு­களும் இன்றி ஊர­டங்கு முழு­மை­யாக அமல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. சலூன் கடை­கள், அழகு நிலை­யங்­கள், உடற்­ப­யிற்சி கூடங்­களில் 50 விழுக்­காடு அள­வுக்­கு­த்தான் இப்­போது மக்­கள் அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

அர­சின் புதிய கட்­டுப்­பாடு பற்றிய அறி­விப்­பு­கள் கடை முன்பு ஒட்­டப்­பட்­டுள்­ளன.

பாது­காப்பு நெறி­மு­றை­களை கடை­ப்பி­டிக்­கா­மல் இருந்­தால் ரூ.5,000 வரை அப­ரா­தம் விதிக்­கப்­படும் என்ற எச்­ச­ரிக்கை பிர­சு­ரங்­க­ளை­யும் உள்­ளாட்சி அமைப்பு ஊழி­யர்­கள் கடை கடை­யாக விநி­யோ­கித்து வரு­கின்­ற­னர். அரசு வழி­காட்­டு­தலை கடைப் பி­டிக்­கா­மல் 2 முறைக்கு மேல் கட்­டுப்­பா­டு­களை மீறி­னால் கடை ­க­ளுக்கு சீல் வைக்­கப்­படும் என்­றும் அதில் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கிடையே தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும், பொது மக்களின் நலன் கருதியும் இம்மாதம் 30ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால் புதிய கட்டுப்பாடு களால் பலன் கிடைக்காவிட்டால் இரவுநேர கொரோனா ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.