செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
c11a410e-38d3-49d2-80fe-72033211d567
-

'ஆளுநருக்கு அதிகாரமில்லை'

சென்னை: துணைவேந்தர்களை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். "பெயரளவுக்குத்தான் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடக்குதே தவிர, அதன் மூக்கணாங்கயிறோ மத்திய பாஜக அரசிடம்தான் இருக்கிறது. பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை நியமிக்க ஆளுநருக்கு நேரடியான அதிகாரம் கிடையாது. அப்படியிருந்தும் ஆளுநர் அந்த அதிகாரத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவது எப்படி? மாநிலத்தின் கல்வி உரிமைகளை வெளியில் இருந்து மத்திய அரசால் பறிக்கப்படுவதற்கும் மாநிலத்துக்கு உள்ளேயே ஆளுநரால் பறிக்கப்படுவதற்கும் முடிவு கட்டவேண்டும்," என்று அறிக்கையில் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

இளை­யர்­கள் கொலை;

'அம­முக' தின­க­ரன் கண்­ட­னம்

ராணிப்­பேட்டை: ராணிப்­பேட்டை மாவட்­டம் அரக்­கோ­ணம் அருகே உள்ள சோக­னூர் பகு­தி­யைச் சேர்ந்த அர்­ஜூன், செப்­பேடு பகு­தியை சேர்ந்த சூர்யா ஆகிய இரண்டு இளை­ஞர்­கள் கடந்த 7 ஆம் தேதி படு­கொலை செய்­யப்­பட்டதற்கு அம­முக பொதுச் செய­லா­ளர் தின­க­ரன் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார். "இரு இளை­ஞர்­கள் முன்­வி­ரோ­தத்­தால் கொடூ­ர­மாக கொல்­லப்­பட்­டி­ருப்­பது கடும் கண்­ட­னத்­திற்­கு­ரி­யது. பெரும் அதிர்ச்­சி­ய­ளிக்­கக்­கூ­டிய இந்­தப் பாத­கத்­தைச் செய்­த­வர்­கள் மீது காவல்­துறை உறுதியான நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும்," என்று டுவிட்­டர் பதி­வில் தின­க­ரன் கூறி­யுள்­ளார். ஏற்­கெ­னவே இந்தக் கொலைக்கு விடு­தலைச் சிறுத்­தை­கள் கட்சித் தலை­வர் திரு­மா­வ­ள­வன், மதி­முக பொதுச்­செ­ய­லா­ளர் வைகோ, திமுக தலை­வர் ஸ்டா­லின் உள்­ளிட்ட பல்­வேறு அர­சி­யல் தலை­வர்­கள் கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர்.