சித்திரை திருவிழா ரத்து; பக்தர்கள் அதிர்ச்சி

சித்திரை திருவிழா ரத்து; பக்தர்கள் அதிர்ச்சி

1 mins read
9132884f-0800-45bf-9cf3-3b77766bc67a
-

மதுரை: மதுரை சித்­திரை திரு­விழா இவ்­வாண்­டும் ரத்து செய்­யப்­பட்­ட­தால் பக்­தர்­கள் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ள­னர். கொரோனா பர­வல் கார­ண­மாக மதுரை மீனாட்சி அம்­மன் கோவி­லில் சித்­திரை திரு­விழா கடந்த ஆண்டு நடக்­க­வில்லை. எனவே இவ்வாண்டு திரு­விழா நடக்­கும் என்று பக்­தர்­கள் எதிர்­பார்த்து இருந்­த­னர்.

இந்த நிலை­யில் மதுரை மீனாட்சி அம்­மன் கோவில் சித்­திரை திரு­வி­ழா­வுக்கு இந்த ஆண்­டும் தமி­ழக அரசு தடை விதித்து உள்­ளது. இத­னால் பக்­தர்­கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அம்­மன் கோவில் பக்­தர்­களில் ஒரு­வ­ரான அவ­னி­யா­பு­ரம் பொண்ணு, "மது­ரை­யில் சட்­ட­ச­பைத் தேர்­தல் காலக் கட்­டத்­தில் கிருமிப் பர­வல் இருந்­தது. அப்­போது தமிழக அரசு ஏன் தேர்­த­லுக்கு தடை விதிக்­க­வில்லை? அப்­போது எல்­லாம் பர­வாத கொரோனா நோய் இப்­போது பர­வப்­போ­கி­றதா," என்று கேள்வியெழுப்பினார்.

ஜெய்­ஹிந்­து­பு­ரம் செந்­த­மிழ்ச்­செல்வி எனும் பக்­தர், "எங்­க­ளது மனக்­கு­மு­றல்­களை மீனாட்சி அம்­ம­னி­டம் தெரி­வித்­து­விட்­டுத்­தான் வந்­தி­ருக்­கி­றேன். அம்­மன் எல்­லா­வற்­றை­யும் பார்த்­து­க்கொண்­டு­தான் இருக்­கி­றார்," என்­றார்.

தவிட்­டுச் சந்­தை­யைச் சேர்ந்த முத்­து­மாரி ஜெயக்­கு­மார், "சித்­திரை திரு­வி­ழா­வின்­போது பக்­தர்­கள் மீது மஞ்­சள் தண்­ணீர் தெளிப்­பார்­கள். அது கிருமி நாசினி. இத­னால் பக்­தர்­க­ளுக்கு நோய் நொடி அண்­டாது. எனவே அரசு உட­ன­டி­யாக சித்­தி­ரைத் திரு­விழாவை நடத்த வேண்டும்," என்று கேட்­டுக் கொண்­டார்.