சென்னை: தமிழகத்தில் சனிக்கிழமை ஒரேநாளில் 5,989 பேருக்கு கிருமி பாதிப்பு உறுதியானது. அத்துடன், பாதிக்கப்பட்டவா்களில் 23 போ் ஒரே நாளில் உயிரிழந்தனா்.
இதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 84,546 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் 5,989 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதியானது. இவர்களில், சென்னையில் மட்டும் 1,977 போ் பாதிக்கப்பட்டிருந்தனர்.
"இதன்மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 9,26,816 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 23 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். அதில் 12 போ் சென்னையைச் சோ்ந்தவா்கள். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 12,886 ஆகவும் சென்னையில் உயிரிழப்பு 4,312 ஆகவும் அதிகரித்துள்ளது.

