சென்னை: சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,106 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே தெருவில் மூன்று பேருக்கும் அதிகமானோர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டால், அந்த தெரு அடைக்கப்பட்டு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. இந்தப் பகுதிகள் அனைத்தும் தடுப்புகள் அமைத்து யாரும் உள்ளே செல்லவோ, வெளியே போகவோ முடியாத வண்ணம் அடைக்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் கிருமி பாதிப்பு அதிகமுள்ள தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் நேற்று 931ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை இன்று 1,106ஆக அதிகரித்துள்ளது. தேனாம்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம், ராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் அதிகளவில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.