ஒவ்வொரு நாளும் இரண்டு லட்சம் மக்களுக்குத் தடுப்பூசி ேபாட சுகாதாரத்துறை தீவிரம் தொற்றைக் குறைக்க நடவடிக்கை

ஒவ்வொரு நாளும் இரண்டு லட்சம் மக்களுக்குத் தடுப்பூசி ேபாட சுகாதாரத்துறை தீவிரம் தொற்றைக் குறைக்க நடவடிக்கை

2 mins read
bfa71354-1a54-4eaf-b0c8-301dcb9fcfa0
சென்னையில் கிருமித்தொற்று பரவலை முறியடிக்க வீட்டுக்கு வீடு கிருமிப் பரிேசாதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல், அங்குள்ள பலசரக்கு கடைக்காரர் ஒருவரிடமும் கொரோனா கிருமித் தொற்று உள்ளதா என சுகாதார ஊழியர் ஒருவர் சோதிக்கிறார். படம்: ஏஎஃப்பி -

சென்னை: கொரோனா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை மட்­டு­மின்றி உயி ரிழப்­போ­ரின் எண்­ணிக்­கை­யும் நாளும் அதி­க­ரித்து வரு­கிறது.

இந்­தக் கிரு­மிப் பர­வ­லின் தீவி ரத்­தைக் கட்­டுப்­ப­டுத்தி, மேலும் அதி­க­ள­வில் உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­படாமல் தடுக்­க­வேண்­டும் என்­பதே மாநில அர­சின் தலை­யாய இலக்­காக உள்­ள­தாக சுகா­தா­ரத் துறை­யின் முதன்­மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்­ணன் கூறி­னார்.

சென்னை-திரு­வல்­லிக்­கே­ணி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், "தமி­ழ­கத்­தில் கிரு­மிப் பர­வல் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தால், பாதிக்­கப்­பட்­ட மக்க­ளுக்கு சிகிச்சை வழங்­கு­வ­தற்கு தோதாக பல மாவட்­டங்­க­ளி­லும் கொரோனா சிகிச்சை மையங்­க­ளை அதிகரித்து வரு­கி­றோம்.

"சென்னை, செங்­கல்­பட்டு, திரு வள்­ளூர், நாகை, தஞ்­சா­வூர் ஆகிய மாவட்­டங்­க­ளில்­தான் இந்­தப் பாதிப்பு அதி­கம் தென்­ப­டு­கிறது.

"கிரு­மிப் பர­வ­லால் ஏற்­படும் உயி­ரி­ழப்­பைத் தடுப்பதே சுகா­தா­ரத் துறை­யின் முக்­கிய இலக்காக உள்­ளது," என்று கூறி­னார்.

ஒவ்­வொரு நாளும் கூடு­தல் பரி­சோ­த­னை­கள் செய்து, தொற்­றுள்­ள­வா்­க­ளைக் கண்­டு­பி­டித்து, அவா்க­ளைத் தனி­மைப்­ப­டுத்தி, அவா்கள் மூலம் மேலும் பல­ருக்கு கிருமி பர­வா­மல் தடுக்­கும் பணி­யும் போா்க்கால அடிப்­ப­டை­யில் முடுக்கி விடப்­பட்­டுள்­ள­தா­க­வும் ராதாகிருஷ்­ணன் தெரி­வித்­தார்.

பொது­மக்­களும் முகக்­க­வ­சம், தனி­ந­பர் இடை­வெளி உள்­ளிட்ட அடிப்­படை பாது­காப்பு விதி­முறை களைப் பின்­பற்றி கிருமி பர­வு­வதைத் தடுக்க ஒத்­து­ழைப்பு அளிக்கவேண்­டும்.

இது­போல் சரி­வர ஒத்­து­ழைப்பு வழங்­கா­மல் போனால் ஏற்­கெ­னவே நடப்­பில் உள்ள கட்­டுப்­பா­டு­கள் மேலும் கடு­மை­யாக்­கப்­படும் என்­றும் அவர் எச்­ச­ரித்­தார்.

"தற்­போது மாநி­லத்­தில் 33,659 பேரும் அவர்­களில் சென்­னை­யில் மட்­டும் 12,861 பேரும் இத்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

"மாநி­லத்­தில் கொரோனா தடுப்­பூ­சிக்கு பற்­றாக்­குறை இல்லை. 18 லட்­சம் தடுப்­பூ­சி­கள் இருப்­பில் உள்­ளன. இனி­ வ­ரும் நாட்­களில் தின­மும் இரண்டு லட்­சம் பேருக்கு ஊசி போட இலக்கு நிா்ணயிக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது நாளொன்­றுக்கு 1.2 லட்­சம் தடுப்­பூ­சி­கள் செலுத்­தப்­ப­டு­கின்­றன," என்று அவர் கூறி­னார்.