சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து கடற்கரை பகுதி களிலும் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
நேற்று ஞாயிறு முதல் இந்தத் தடை உத்தரவு அமலுக்கு வந்ததை அடுத்து, கடற்கரைப் பகுதிகளில் போலிசார் தடுப்புகள் அமைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மின்னல் வேகத்தில் உக்கிரமடையும் கிருமிப் பரவலைத் தடுக்கும் வகையில், அரசு இம்மாதம் 30ஆம் ேததி வரை சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இந்நிலையில், ரமலான் மாதத்தை ஒட்டி தொழுகை நடத்துவதற்கு வசதியாக பள்ளிவாசல்களை இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதிக்க வேண்டும் என பல்வேறு இஸ்லாமியத் தலைவா்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனா்.
இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள தமிழக அரசு, கட்டுப்பாடுகளில் சில திருத்தங்கள் செய்து அறிக்ைக வெளியிட்டுள்ளது. அதன்படி, "அனைத்து வழி பாட்டுத் தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே தரப்பட்டிருந்த வழிபாட்டு நேர அனுமதியை இரவு 10 மணி வரை நீட்டித்து அனுமதி வழங்கி உள்ளது.
ஆனாலும், திருவிழாக்கள், மதம் சாா்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புதிய திரைப்படங்கள் முதல் ஏழு நாட்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விடவும் கூடுதலாக ஒரு காட்சியைத் திரையிடவும் அனுமதிக்கப்படுகிறது.

