'வழக்கம்போல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்'

'வழக்கம்போல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்'

1 mins read
0d41ecc4-367b-488b-84b2-05cec5ac46ad
-

விரு­து­ந­கர்: ஸ்ரீவில்­லி­புத்­தூர் காங்­கி­ரஸ் வேட்­பா­ளர் மாத­வ­ராவ் உயி­ரி­ழந்த நிலை­யில், அத்­தொ­கு­திக்கான வாக்கு எண்­ணிக்கையும் மே 2ஆம் தேதியே நடை­பெ­றும் என்று தலை­மைத் தேர்­தல் அதிகாரி சத்­ய­பி­ரத சாகு தெரி­வித்தார்.

"வாக்கு எண்ணிக்கை வழக்­கம்­போல நடைபெறும். தேர்­த­லில் மாத­வ­ராவ் வெற்றி­பெ­றும் பட்­சத்­தில் அத்­தொ­கு­தி­யில் இடைத்­தேர்­தல் நடத்­தப்­படும். ஆனால், தோல்வி அடைந்தால் இடைத்தேர்தலுக்கு வாய்ப்­பில்லை," என்றார்.

மாத­வ­ராவ் மறை­வுக்கு திமுக தலை­வர் மு.க.ஸ்டா­லின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாஜ­கவின் பொன்.ராதாகிருஷ்­ணன், காங்­கி­ரஸ் கட்சி தமி­ழக பொறுப்­பா­ளர் தினேஷ் குண்டுராவ் உள்­ளிட்ட பல­ரும் இரங்­கல் தெரிவித்­துள்­ள­னர்.

காங்­கி­ரஸ் கட்­சி­யின் பீட்­டர் அல்­போன்ஸ் கூறு­கை­யில், "பல தேர்­தல்­களில் அவர் வாய்ப்பு கேட்­ட­போ­தெல்­லாம் அவ­ருக்கு பல்­வேறு சூழ்­நிலை கார­ண­மாக கிடைக்­க­வில்லை. இம்முறை பல முயற்­சி­களுக்குப் பிறகு வாய்ப்பு கிட்டியது. ஆனால், பயனற்று போய்விட்டது," என்று தெரிவித்துள்ளார்.

35 ஆண்டுகால நண்பர். கலப்படமில்லாத காங்கிரஸ்காரர். வெற்றிக்கனியைக் கொய்யும் வேளையில் அவர் உயிரிழந்தார் என்பது பெரும் பேரிடி.

காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ்