விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட மாதவராவ், 63, கொரோனா கிருமித்தொற்று காரணமாக நேற்று காலை காலமானார்.
மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரு வாரமாக இவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சமயத்தில் அவருக்கு இரு முறை மாரடைப்பு ஏற்பட்ட தாகவும் நுரையீரல் பாதிப்பு இருந்த தாகவும் சொல்லப்படுகிறது.
மாதவராவ் சென்னையில் வசித்து வந்தாலும் அவரது சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்தான் என்பதால் அங்கு அடக்கம் செய்ய கொண்டு வரப்படலாம் எனவும் ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் 20 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மாதவ ராவுக்கு பிரசாரத்தின்போதே திடீரென உடல்நலம் குன்றியது. இதையடுத்து மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட தனது தந்தைக்காக இறுதிக்கட்ட பிரசாரத்தில் அவரது மகள் திவ்யா ராவ் களமிறங்கினார்.