'அடுத்த 20 நாள்கள் மிகவும் நெருக்கடியான காலகட்டம்'

'அடுத்த 20 நாள்கள் மிகவும் நெருக்கடியான காலகட்டம்'

1 mins read
cad62cc0-83db-4b80-a0cf-86b83f9a1177
-

சென்னை: சென்­னை­யில் அடுத்த 20 நாள்­கள் மிக­வும் நெருக்­க­டி­யான கால­கட்­ட­மாக இருக்­கும் என சென்னை மாந­க­ராட்சி ஆணை­யர் கோ.பிர­காஷ் தெரி­வித்­துள்­ளார்.

சென்னை பால­வாக்­கம் பகுதி யில் மாந­க­ராட்சி சார்­பில் நடத்­தப் படும் காய்ச்­சல் முகாம்­க­ளை­யும் வீடுவீடா­கச் சென்று நடத்­தப்­படும் பரி­சோ­த­னை­க­ளை­யும் ஆணை­யர் பிர­காஷ் பார்­வை­யிட்­டார்.

அப்­போது அவர் செய்­தி­யா­ளர் களி­டம் கூறு­கை­யில், "சென்னை யில் அடுத்த 20 நாள்­கள் நெருக் கடி­யான கால­கட்­ட­மாக இருக்­கும். மக்­கள் கவ­ன­மாக வீட்­டுக் குள்­ளேயே இருப்­ப­தும் வெளி­யில் அதிக நட­மாட்­டத்­தைக் குறைத்­துக்கொள்­வ­தும் நல்­லது.

"கொரோனா விதி­மீ­றல்­களுக்கு அப­ரா­தம் வசூ­லிப்­பது அர­சின் வரு­வா­யைப் பெருக்­கிக் கொள்­வ­தற்­காக எடுக்­கப்­படும் நட­வ­டிக்கை அல்ல. மக்­க­ளி­டையே விழிப்­பு­ணர்­வை­யும் கட்­டுப்­பாட்டை யும் கொண்டு வரு­வது, மக்­களை நல­மாக வாழ­வைப்­ப­தற்­கா­கத்­தான்," என்று கூறி­னார்.

பொது­மக்­க­ளுக்கு சளி, காய்ச்­சல் அறி­கு­றி­கள் தென்­படும்போது மருத்­து­வ­ம­னைக்­குச் சென்று தொடக்­கத்­தி­லேயே பரி­சோ­தனை செய்­து­கொண்­டால் உயி­ரி­ழப்­பு­களைத் தடுப்­ப­தோடு மற்­ற­வர்­க­ளுக்கு இத்­தொற்று பர­வு­வ­தை­யும் தவிர்க்­க­மு­டி­யும்.

"சென்­னை­யில் தடுப்­பூசி செலுத்­தப்­பட வேண்­டிய 45 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­கள் 10 லட்­சம் பேர் உள்­ள­னர். அவர்­கள் தடுப்­பூசி செலுத்­திக்­கொள்ள விரும்பி­னால் 10 நாள்­களில் அனை­வ­ருக்­குமே தடுப்­பூசி போட­மு­டி­யும். எனவே முடிந்­த­வரை 45 வய­துக்கு மேற்­பட்ட அனை­வ­ரும் சீக்­கி­ரம் தடுப்­பூசி செலுத்­திக்­கொள்­வது நல்­லது," என்று அறி­வு­றுத்­தி­னார்.