திருவிழா ரத்து: திருநங்கைகள் ஏமாற்றம்

திருவிழா ரத்து: திருநங்கைகள் ஏமாற்றம்

1 mins read
625c8641-4e38-49de-8b26-430b441e6ea7
-

உளுந்­தூர்­பேட்டை: கொரோனா தொற்று வேக­மாகப் பரவி வரு­வதை அடுத்து, ஆண்டுதோறும் நடத்தப்படும் கூத்­தாண்­ட­வர் கோயி­ல் திருவிழா இந்தாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இத னால், திருநங்கைகள் பலரும் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டம், உளுந்­தூர்­பேட்டை அருகே உள்ள கூவா­கத்­தில் பிர­சித்திபெற்ற கூத்­தாண்­ட­வர் கோயில் உள்­ளது. இக் கோயி­லில் ஆண்­டு­தோ­றும் சித்­திரை திரு­விழா கோலா­க­ல­மாக நடை­பெ­று­வது வழக்­கம்.

ஆனால், இவ்வாண்டு கிருமிப் பரவலால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் வகையில், சித்­திரை திரு­விழா ரத்து செய்­யப்­ப­டு­வ­தாக மாவட்ட நிர்­வா­கம் அறி­வித்­துள்­ளது.

எனி­னும் வழக்­கம்­போல் கூத்­தாண்­ட­வர் கோயி­லில் பூஜை­கள் நடை­பெ­றும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த விழா­வில் தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­களைச் சேர்ந்­த­வர்­கள் மட்­டு­மின்றி மும்பை, ஆந்­திரா, கர்­நா­டகா உள்­ளிட்ட வெளி­மா­நி­லங்­க­ளைச் சேர்ந்த திரு­நங்­கை­களும் கலந்துகொள்வர்.