தெற்கு ரயில்வே: கொவிட்-19 நோயாளிகள் சிகிச்சைக்கு 500 ரயில் பெட்டிகள் தரத் தயார்

தெற்கு ரயில்வே: கொவிட்-19 நோயாளிகள் சிகிச்சைக்கு 500 ரயில் பெட்டிகள் தரத் தயார்

1 mins read
db80eddd-2bc2-4599-9ad3-c75e4b197aea
-

சென்னை: தமி­ழ­கத்­தில் உள்ள 38 மாவட்­டங்­களில் தலை­ந­கர் சென்­னை­யில் மட்­டும் கிருமி பர­வும் வேகம் அதி­க­ரித்து வரு­வ­தால், ரயில் பெட்­டி­க­ளைக் கொரோனா சிகிச்­சைக்கு ஒதுக்­கித்­தர தயா­ராக இருப்­ப­தாக தெற்கு ரயில்வே அறி­வித்­துள்­ளது.

இது­கு­றித்து ரயில்வே அதி­கா­ரி­கள் கூறி­ய­போது, "கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் சிகிச்சை பெறு­வ­தற்கு தோதாக 500 ரயில் பெட்­டி­கள் தயார் நிலை­யில் உள்­ளன. தமி­ழக சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­க­ளின் விருப்­பத்­துக்ே­கற்ப ரயில் பெட்­டி­க­ளைப் பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம். இத்­த­க­வலை ஏற்­கெ­னவே தமி­ழக அர­சுக்­கும் தெரி­வித்­து­விட்­டோம்," என்­ற­னர்.

மாநி­லத்­தில் கடந்த 24 மணி ேநரத்­தில் மட்­டும் 6,618 பேருக்கு கிரு­மித்­தொற்று உறு­தி­யா­னது. இவர்­களில் சென்­னை­யில் 2,123 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், சென்­னை­யில் கொரோனா நோயா­ளி­க­ளால் மருத்­து­வ­மனை படுக்­கை­கள் நிரம்பி வரு­கின்­றன. மாந­க­ராட்சி மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் 60% படுக்கை கள் நிரம்­பி­விட்­டன.

சென்­னை­யில் பாதிப்பு மோச­மாக உள்­ள­தால் மாநில கல்­லூரி விடுதி, அண்ணா பல்­க­லைக்­க­ழ­கம், பாரதி கல்­லூரி உள்­பட பல்­வேறு கல்வி நிறு­வன வளா­கங்­கள் கொரோனா நோயா­ளி­கள் சிகிச்சை பெறும் வார்­டு­க­ளாக மாற்­றப்­பட உள்­ளன.