தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.10 லட்சத்துக்கு விற்கப்பட்ட மகள் மீட்பு

2 mins read
b8a596f4-043f-459d-95db-658a714d2d47
-

சேலம்: தனது 10 வயது மகளை ரூ.10 லட்­சத்­துக்கு விற்­று­விட்­ட­தாக பெற்ற தாய் ஒரு­வர் பேசும் கைபேசி உரை­யா­டல் பதிவு சமூக ஊடகங்­களில் வெளி­யான நிலை­யில், விற்­கப்­பட்ட சிறு­மியை தொழி­லதிபரி­டம் இருந்து போலி­சார் மீட்­டுள்­ள­னர்.

சேலம் அன்­ன­தா­னப்­பட்டி பகுதி யைச் சேர்ந்­த­வர் சின்­னப்­பொண்ணு. இவ­ரது மகள் சும­திக்கு இரு பெண் குழந்­தை­கள், ஒரு மகன் உள்­ளனர்.

சும­தி­யின் கண­வர் சதீஷ் கோழிக்­கறி விற்­ப­னைக் கடை­யில் வேலை பார்த்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், வறுமை காரண மாக பாட்­டி­யி­டம் வளர்ந்து வந்த மகளை, கடந்த ஆறு மாதத்­திற்கு முன்பு சுமதி தனது வீட்­டுக்கு அழைத்­துச் சென்­று­விட்­டார்.

அதன்­பின்­னர், சேலம் குகை பகு­தி­யைச் சேர்ந்த தொழி­ல­தி­பர் கிருஷ்­ணன் என்­ப­வர் தனி­யாக வசித்து வரும் நிலை­யில், அவ­ரது வீட்­டில் வீட்டு வேலை­கள் செய்­வ­தற்கு சுமதி மக­ளைச் சேர்த்து­விட்­ட­தா­க கூறப்­படுகிறது.

இத­னை­ய­றிந்த சிறு­மி­யின் பாட்டி சேலம் டவுன் அனைத்து மக­ளிர் காவல்­நி­லை­யத்­தில் புகார் அளித் ததை அடுத்து, சிறுமி மீட்­கப்­பட்டு சேலத்­தில் உள்ள காப்­ப­கத்­தில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.

இதற்­கி­டையே, சிறு­மி­யின் தாய் சுமதி, தனது உற­வுக்­கார பெண்­ணி­டம் ரூ.10 லட்­சத்­துக்குப் பெண் குழந்­தையை விற்­ற­தாகப் பேசும் கைபேசி உரை­யா­டல் பதிவு சமூக வலைத்­த­ளங்­களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

தனது வீடு வாங்கும் கனவு இதன்­மூ­லம் நிறை­வே­றி­விட்­ட­தாக சுமதி கூறுவதை சகித்­துக்­கொள்ள முடி­யாத அந்த உற­வுக்­கா­ரப் பெண், "உனக்கு மனசாட்­சியே இல்­லையா?" என வசை­பா­டும் உரை­யா­ட­லும் இடம்­பெற்­றுள்­ளது.

சும­தி­யி­டம் போலிசாரின் தீவிர விசா­ரணை தொடர்­கிறது.