தமிழகத்தில் மீண்டும் தடுப்பூசித் திருவிழா

தமிழகத்தில் மீண்டும் தடுப்பூசித் திருவிழா

2 mins read
9eeb0614-30ea-4e80-9409-07e56bf3ba56
மும்பையில் உள்ள லோக்மான்யா ரயில் நிலையத்தை நோக்கி படையெடுத்த புலம்பெயர்ந்த தொழி லாளர்களை போலிசார் ஒழுங்குபடுத்துகின்றனர். தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கிருமித்தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் போக்குவரத்து முடக்கப்படலாம் என்ற அச்சத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவசர அவசரமாக சொந்த ஊருக்குத் திரும்புகின்றனர். இந்த நிலையில் தமிழ கத்தில் கிருமிப் பரவலுக்கு எதிரான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. படம்: ராய்ட்டர்ஸ் -

சென்னை: தமி­ழ­கத்­தில் முதல் தடுப்­பூ­சித் திரு­விழா வெற்றி பெற்­ற­தைத் தொடர்ந்து மீண்­டும் மற்­றொரு தடுப்­பூ­சித் திரு­விழா அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதி­க­ரித்து வருகிறது.

இது­வரை 2 கோடியே 3 லட்­சத்து 54 ஆயி­ரத்து 41 பேருக்கு கொரோனா பரி­சோ­தனை செய்­யப் ­பட்­டுள்­ளது.

இதில் 9 லட்­சத்து 47 ஆயி­ரத்து 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இவர்­களில் 5 லட்­சத்து 71 ஆயி­ரத்து 717 பேர் ஆண்­கள், 3 லட்­சத்து 75 ஆயி­ரத்து 376 பேர் பெண்­கள், 36 பேர் மூன்­றாம் பாலி­னத்­த­வர்­கள்.

கடந்த மாதத்திலிருந்து நாடு முழு­வ­தும் கொரோனா 2வது அலை வேக­மாகப் பர­வி­ய­தால் தின­சரி பாதிப்பு எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்து வரு­கிறது. தற்­போது தின­சரி பாதிப்பு 1 லட்­சத்து 60 ஆயி­ரத்தைக் கடந்­து­விட்­டது.

இதை­ய­டுத்து தடுப்­பூசி போடும் பணி­களை விரை­வு­ப­டுத்த பிர­த­மர் மோடி திட்­ட­மிட்­டுள்­ளார்.

இதற்­காக மத்­திய அரசு சார்­பில் தடுப்­பூ­சித் திரு­வி­ழா­வுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

அதன்­படி இந்­தி­யா­வில் 4 நாள் தடுப்­பூசித் திரு­விழா கடந்த 11ஆம் தேதி தொடங்­கி­யது.

இதில் பங்கேற்று ஏரா­ள­மா­னோர் ஆர்­வ­மு­டன் தடுப்­பூசி போட்டுக் கொண்டனர்.

இந்த நிலையில் மத்­திய அர­சின் தடுப்­பூசித் திரு­விழா நேற்­று­டன் முடிவடைந்தது.

இதற்கிடையே தடுப்­பூசித் திரு­வி­ழாவை நடத்­து­மாறு மாநில அர­சு­களை மத்­திய அரசு கேட்­டுக்­கொண்­டது.

அதன் அடிப்­ப­டை­யில் தமி­ழ­கத்­தில் தடுப்­பூசித் திரு­விழா நடத்தி அதி­கம் பேருக்குத் தடுப்­பூசி போட தமி­ழக சுகா­தா­ரத்­துறை ஏற்­பாடு செய்­தது.

இதன்­படி தமி­ழ­கத்­தில் நேற்று முதல் 16ஆம் தேதி வரை மூன்று நாட்­கள் தடுப்­பூசித் திரு­விழா நடக்­கிறது. இதில் பொது­மக்­கள் ஆர்­வ­மாக பங்­கேற்று தடுப்­பூசி போட்டு வரு­கி­ன்றனர்.

தமி­ழ­கத்­தில் தற்­போது தின­மும் 1.63 லட்­சம் பேருக்குத் தடுப்­பூசி செலுத்­தப்­பட்டு வரும் நிலை­யில் இந்த எண்­ணிக்­கையை 2 லட்­ச­மாக உயர்த்த சுகா­தா­ரத்­துறை திட்­ட­மிட்டு இருக்­கிறது.

தமி­ழ­கத்­தில் உள்ள அரசு மருத்­து­வ­ம­னை­கள், மருத்­துவக் கல்­லூ­ரி­கள், மாவட்ட தலைமை மருத்­து­வ­ம­னை­கள், நகர்ப்­புற மற்­றும் கிரா­மப்­புற அரசு ஆரம்ப சுகா­தார நிலை­யங்­கள் 1,900 சிறிய மருந்த கங்கள் மற்­றும் தடுப்­பூசி செலுத்த அனு­மதி பெற்ற தனி­யார் மருத்து­வ­ ம­னை­கள் என 5,000க்கு மேற்­பட்ட மையங்­களில் கொரோனா தடுப்­பூசி செலுத்­தப்­பட்டு வரு­கிறது.

தடுப்­பூசித் திரு­விழா தொடர்­பில் பேசிய சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­கள், தமி­ழ­கத்­தில் இது­வரை 39 லட்­சத்து 44 ஆயி­ரம் பேர் கொரோனா தடுப்­பூசி போட்­டுள்­ள­னர். கொரோனா தடுப்­பூசி பற்­றிய விழிப்­பு­ணர்வை பொது­மக்­கள் மத்­தி­யில் வேக­மாகக் கொண்டு செல்­லும் முயற்­சி­யா­கவே இந்த தடுப்­பூசித் திரு­விழா நடக்­கிறது என்று தெரி­வித்­த­னர்.