தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்ட விவகாரம்; மறு வாக்குப்பதிவு

2 mins read
427cc382-2786-4e26-a209-212cfd040838
-

சென்னை: வேளச்­சேரி தொகு­திக்­குட்­பட்ட வாக்­குச்­சா­வடி எண் 92ல் இம்மாதம் 17ஆம் தேதி மறு வாக்குப்­பதிவு நடை­பெ­றும் என்று தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­துள்­ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மறு வாக்குப்­ப­திவு நடை­பெ­றும்.

தமி­ழ­கம் முழு­வ­தும் இம்­மா­தம் 6ஆம் தேதி வாக்­குப்­ப­திவு நடை­பெற்­றது.

இதில் வேளச்­சேரி தொகு­தி­யில் உள்ள வாக்­குச்­சா­வடி எண் 92ல் வாக்குப்­ப­திவு முடிந்­த­தும் இரவு 7:30 மணிக்கு வாக்­குச் சாவ­டி­யி­லி­ருந்து மூன்று ஊழி­யர்­கள் சேர்ந்து இரு வாக்­குப் பதிவு இயந்­தி­ரங்­கள், ஒரு கட்­டுப்­பாட்டு இயந்­தி­ரம் மற்­றும் ஒரு விவிபேட் இயந்­தி­ரம் ஆகி­ய­வற்றை இரு சக்­கர வாக­னத்­தில் வைத்து எடுத்­துச் செல்ல முயற்சி செய்­த­னர்.

ஆனால் பொது­மக்­கள் அவர் ­க­ளைப் பிடித்து போலி­சிடம் ஒப்­ப­டைத்­த­னர்.

இதை­ய­டுத்து தேர்­தல் அதி­கா­ரி­கள் அவர்­க­ளி­டம் விசா­ரணை நடத்தி மூவ­ரை­யும் இடைக்­கால பணி­நீக்­கம் செய்­துள்­ள­னர்.

இது குறித்து விளக்­கம் அளித்த தமி­ழக தலைமை தேர்­தல் அதி­காரி சத்­ய­பி­ரதா சாஹு, "இரு சக்­கர வாக­னத்­தில் விவி­பேட் உள்­ளிட்ட இயந்­தி­ரங்­கள் கொண்டு சென்­றது விதி­மீ­ற­லா­கும் என்­றார்.

அந்த விவி­பேட் இயந்­தி­ரத்­தில் 15 வாக்­கு­கள் பதி­வா­கி­யி­ருந்­த­தா­க­வும் அவர் சொன்­னார்.

சம்­பந்­தப்­பட்ட வாக்­குச் சாவ­டி­யில் 200 வாக்­கு­கள் இருக்­கும் நிலை­யில் இந்த இயந்­தி­ரத்­தில் 15 வாக்­கு­கள் மட்­டுமே பதி­வா­கி­யுள்­ளன. இத­னால் வாக்­குப் பதிவு குறித்து பல்­வேறு சந்­தே­கங்­கள் எழுந்­துள்­ளன. இந்த நிலை­யில் மறு­வாக்­குப் பதிவு நடை­பெ­றும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்கிடையே கோவை மாவட்ட வாக்கு எண்ணும் மையமான தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரிக்குள் (ஜி.சி.டி.) நேற்று முன்தினம் இரவு நேரத்தில் இரண்டு கொள்கலன் லாரிகள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து திமுகவினருக்கு தகவல் பறந்தது.

உடனே நா.கார்த்திக் மயூரா ஜெயக்குமார், குறிச்சி பிரபாகரன், சண்முகசுந்தரம், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோர் ஜி.சி.டி. கல்லூரிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் லாரிகளை சோதனையிட்டனர். அது, கொள் கலன் லாரி அல்ல, மகளிர் போலிசார் பயன்படுத்தும் நடமாடும் கழிவறை வாகனம் என்பது தெரிய வந்தது.

அப்போது, திமுக வேட்பாளர்கள் இரவு நேரத்தில் கழிவறை வாகனங்களைக் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இரண்டு லாரிகளும் வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டன.