புதிய உச்சமாக ஒரே நாளில் 7,819 பேருக்கு கிருமி பாதிப்பு

புதிய உச்சமாக ஒரே நாளில் 7,819 பேருக்கு கிருமி பாதிப்பு

1 mins read
459110cc-4cbb-4681-b58b-688bc206fa95
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கடந்த 24 மணி நேரத்­தில் இது­வரை இல்­லாத உச்­ச­மாக 7,819 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது உறு­தி­யாகி உள்­ளது. மேலும், இத்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வா்­களில் 25 போ் புதன்­கி­ழமை உயி­ரி­ழந்­தனா். இவர்­களில் எழு­வர் சென்னை யைச் சோ்ந்த­வா்­கள்.

இது­கு­றித்து தமி­ழக அர­சின் சுகா­தா­ரத் துறை புதன்­கி­ழமை வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்­பில், "தமி­ழ­கத்­தில் புதன்­கி­ழமை மட்­டும் 97,668 மாதி­ரி­கள் கொரோனா பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டதில் 7,819 பேருக்கு இத்­தொற்று இருப்­பது உறு­தி­யா­னது.

இதன் மூலம் மாநி­லம் முழு­வ­தும் இதுவரை பாதிக்­கப்­பட்­ட­வா்­க­ளின் எண்­ணிக்கை 9,54,948ஆக அதி­க­ரித்­துள்­ளது.

சென்­னை­யில் மட்­டும் 2,564 போ் புதன்­கி­ழமை அன்று செய்­யப்பட்ட பரி­சோ­த­னை­யில் பாதிக்­கப்பட்­டி­ருந்­தது தெரி­ய­வந்­தது.

தமி­ழ­கத்­தில் மொத்த உயி ரிழப்பு 12,970 ஆக­வும் சென்னை யில் உயி­ரி­ழப்பு எண்­ணிக்கை 4,344 ஆக­வும் அதி­க­ரித்­துள்­ளது.

சென்­னை­யைத் தவிர அதிக பட்­ச­மாக செங்­கல்­பட்டு 772, கோவை 540, திரு­வள்ளூா் 383, தூத்­துக்­குடி 244, திருப்பூா் 225, திருச்சி 216, மதுரை 199 ஆகிய எண்­ணிக்­கை­யில் தொற்று பதி­வா­னது. அதே­போன்று குறைந்­த­பட்­ச­மாக பெரம்­ப­லூ­ரில் இரு­வ­ரும் அரி­ய­லூ­ரில் 22 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனா். 37,673 போ் தனி மைப்படுத்தப்பட்டு உள்ளனா்.