கிருஷ்ணகிரி: யுகாதி புத்தாண் டின்போது தனது பெற்றோர் வீட்டில் நடந்த விருந்தில் கலந்துகொள் வதற்காக கணவருடன் வந்திருந்த மகளை, தந்தையே சுட்டுக் கொன்றுள்ள அதிர்ச்சி சம்பவம் கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது.
இந்தச் சம்பவத்தின்போது, மகள் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது.
தனது மகளைப் பார்த்து, "அய்யோ ஆத்திரத்தில் என் மகளைச் சுட்டுக்கொன்று விட்டேனே," என்று கதறி அழுதவாறு தந்தை மகளை அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்றுள்ளார்.
ஆனால், வெங்கடலட்சுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
தந்தை அருணாச்சலத்தை தளி போலிசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள கரடிக்கல் கிராமத்தில் அருணாச்சலம், 60, மாதவி, 55, தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் வெங்கடலட்சுமி, 21.
இவருக்கு நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ள நிலையில், வெங்கடலட்சுமி தனது கணவர் ஸ்ரீனிவாசுடன் தாயார் வீட்டிற்கு விருந்துக்கு வந்துள்ளார்.
அப்போது, அருணாச்சலம் மது அருந்திவிட்டு வழக்கம்போல் வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
பெற்றோருக்கு இடையே வாக்கு வாதம் முற்றியதை அடுத்து, ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரம் அடைந்த தந்தை வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வந்து மனைவியைச் சுட குறி வைத்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வெங்கடலட்சுமி தனது தாயைக் காப்பாற்ற குறுக்கே ஓடி வந்து தடுத்துள்ளார்.
ஆனால், அருணாச்சலம் துப்பாக்கியின் விசையை அழுத்தி யதில் வெங்கடலட்சுமி உடலில் குண்டுகள் பாய்ந்ததில், அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.

