செம்புக் கம்பியில் திருக்குறள் வடிவமைத்து சாதனை

செம்புக் கம்பியில் திருக்குறள் வடிவமைத்து சாதனை

1 mins read
86ffcec2-2549-4b7b-a675-4b8b58687b33
-

கட­லூர்: கட­லூ­ரைச் சேர்ந்த மூன்­றாம் வகுப்பு வரை மட்­டுமே படித்­துள்ள ஜெயக்­கு­மார் (படம்) என்ற இைளஞர், மெல்­லிய செம்­புக் கம்­பி­யைக் கொண்டு திருக்­குறளை வடி­வ­மைக்கும் ஒரு வித்­தி­யா­ச­மான முயற்­சி­யில் இறங்கி உள்­ளார்.

விரைவில் வள்­ளு­வ­ரின் 1,330 குறள்­க­ளை­யும் செம்­புக் கம்­பி­யில் வடி­வ­மைத்து கின்­னஸ் சாதனை படைக்க உள்­ள­தாகவும் கூறி­யுள்­ளார் ஜெயக்­கு­மார்.

கட­லூர் மாவட்­டம், கூத்­தப் பாக்­கம் பகு­தி­யைச் சேர்ந்த ஜெயக்­கு­மார், தனது குழந்தைப் பரு­வம் முதலே சிறு கம்­பி­க­ளைக் கொண்டு தான் விரும்­பிய வடி­வங்களைச் செய்­யும் பழக்­கத்தை கைக்கொண்டு வந்­துள்­ளார்.

நாள­டை­வில் எளி­தில் வளை­யும் தன்மை கொண்ட செம்­புக் கம்­பி­யைப் பயன்­ப­டுத்தி டாலர், கீ செயின், பெயர்­கள் உள்ளிட்ட பல வடிவங்களைச் செய்து வந்­துள்ளார்.

தனது வடிவமைப்பின் மீது அதீத ஆர்­வம் கொண்ட ஜெயக்­கு­மார், உல­கப்­பொ­து­ம­றை­யாம் திருக்­கு­றளையும் செம்புக் கம்­பி­யில் வடி­வ­மைக்கும் பணியில் ஈடு­பட்­டுள்­ளார்.

இரண்­டடி திருக்­கு­றளை எந்­த­வித இணைப்­பும் இன்றி ஒரே செம்புக் கம்­பி­யில் வளைத்து வடிவமைக்கிறார். முத­ல­டி­யின் நான்கு வார்த்­தை­களும் இரண்­டாம் அடி­யின் மூன்று வார்த்­தை­களும் இணைந்­த­படி கோர்­வை­யாக வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளன.