சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கிருமிப் பரவ லைக் கட்டுக்குள் கொண்டுவருவது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கிருமிப் பரவலை முறியடிக்க தடுப்பூசி போடுவது, பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றச் செய்வது, பின்பற்றாமல் இருப்பவர்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும், இந்தக் கட்டுப்பாடு கள் பலவற்றையும் பொதுமக்கள் பின்பற்றினாலும்கூட நோயின் தாக்கம் கட்டுப்படாமல் தீவிரம் அடைந்து வருவதால், மேலும் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகளை எவ்விதத்தில் செயல்படுத்தலாம், 'பிளஸ் 2' தோ்வை எப்போது நடத்த லாம் என்பது போன்ற பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்தும் ஆேலாசிக்கப்பட்டது.
வணிகம், தொழில் நிறுவனங் களைப் பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதற்கும் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் ஊரடங்கை பிறப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் அன்றாட கிருமி பாதிப்பு 8,000ஐ நெருங்கியுள்ளது.
நோயாளிகளால் மருத்துவ மனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், ரயில்கள் உள்ளிட்ட அனைத்தும் சிகிச்சை மையங்களாக மாறி வருகின்றன.
இதற்கிடையே, சென்னை பெரு நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு தடைகளைப் பிறப்பித்து மாநகர காவல் ஆணை யர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஏப்ரல் 30ஆம் தேதி வரை பொதுமக்கள் ஒன்றுகூடுவது, மனிதச் சங்கிலி, பொதுக்கூட்டங்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

