சென்னை: கொரோனா இரண்டா வது அலை காரணமாக குழந்தை களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. தமிழ கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 256 குழந்தைகள் இத்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், "தமிழகத்தில் வியாழனன்று மட்டும் 7,987 பேர் புதிதாக கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
"இவர்களில் 2,558 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இவர்க ளுடன் 256 குழந்தைகளும் தமிழ கம் எங்கும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
"கடந்த ஆண்டு கொரோனா பரவலின்போது முதியவர்களும் இணை நோய் உள்ளவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
"ஆனால், தற்போதைய கொரோனா காரணமாக ஒன்று முதல் எட்டு வயது வரையுள்ள குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்," என்று கூறப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு பரவும் கொரோனாவால் காய்ச்சல், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு, தலைவலி போன்ற நோய் அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகளுக்கான தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

