திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் நடிகர் விவேக் அனுமதி

திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் நடிகர் விவேக் அனுமதி

1 mins read
6416a16a-5bee-4d25-8c9c-a25df89599b9
நகைச்சுவை நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டபோது எடுத்த படம். தற்போது அவர் மாரடைப்புக்கு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார்.படம்: ஊடகம் -

சென்னை: நகைச்­சுவை நடி­கர் விவேக், திடீர் மார­டைப்பு காரண மாக சென்­னை­யில் உள்ள சிம்ஸ் மருத்­து­வ­ம­னை­யின் தீவிர சிகிச்சைப் பிரி­வில் நேற்று காலை அனு­ம­திக்­கப்­பட்­டார். அவ­ரது உடல்­நி­லையை மருத்­து­வர்­கள் தீவி­ர­மாக கவ­னித்து வரு­கின்­ற­னர்.

இச்செய்­தி­யைச் கேட்டு கோலி­வுட் முதல் உல­கெங்­கும் வாழும் மக்­கள் பல­ரும் அதிர்ச்சி அடைந்­த­னர். விவேக் விரை­வில் குண­மாக வேண்­டும் என அவரது ரசி­கர்­கள் பிரார்த்தனை செய்து வரு­கின்­ற­னர்.

நேற்று முன்­தி­னம்­தான் சென்னை, ஓமந்­தூ­ரார் அரசு மருத்­து­வ­ம­னை­யில் கொரோனா தடுப்­பூசி செலுத்­திக்­கொண்­டார் விவேக்.

அப்­போது, சுகா­தா­ரத் துறைச் செய­லா­ளர் ராதா­கி­ருஷ்­ணன் உள்­ளிட்ட பல­ரும் உட­னி­ருந்­த­னர்.

தடுப்­பூசி போட்டுக்­கொண்ட பிறகு விவேக் பேசி­ய­போது, "தடுப்­பூசி குறித்த வதந்­தி­கள் மக்­க­ளி­டையே பரவி வரு­கின்­றன. இந்த தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­வ­தால் நமக்கு எந்­த­வித ஆபத்­தும் இல்லை. வதந்­தி­களுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கவே நான் தடுப்­பூ­சி­ போட்டுக்­கொண்­டுள்­ளேன்.

"முகக்­க­வ­சம், கைகளை அடிக்­கடி கழு­வு­தல், தனி­ம­னித இடை வெளி ஆகி­ய­வை­தான் மக்­க­ளுக்கு சமூ­கப் பாது­காப்பு.

"ஆனால், இந்த தடுப்­பூசி மட்­டும்­தான் மருத்­துவ ரீதி­யான ஒரே­யொரு பாது­காப்பு.

"இது­தான் உயி­ரைக் காப்­பாற்­றும் பாதுகாப்பு. இதைச் செலுத்­திக்­கொள்வதால் தொற்று வராது என்­ப­தல்ல. வந்­தா­லும் உயி­ரி­ழப்பு என்­பது இருக்­காது. இரு­முறை தடுப்­பூசி செலுத்­திக்­கொண்ட பிறகு, இரு வாரங்­கள் கழித்து நோய் எதிர்ப்­புச் சக்தி நம் உட­லில் உண்­டா­கும்," என்­றார்.