தஞ்சை, மாமல்லபுரம் கோவில்கள் மூடப்பட்டன

1 mins read
91105cd4-3ded-4812-ac00-f97bc0fff200
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சை பெரியகோயில் மூடப்பட்டது. ேநற்றுமுதல் மே 15ஆம் தேதி வரை பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. படம்: தமிழக ஊடகம் -

தஞ்­சா­வூர்: நாடெங்­கி­லும் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரும் கொரோனா கிரு­மிப் பர­வ­லைத் தடுக்­கும் வகை யில் பல்­வேறு கட்­டுப்­பா­டு­களும் விதிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இதன் ஒரு பகு­தி­யாக, நாடு முழு­வ­தும் தொல்­லி­யல் துறை­யின் கட்­டுப்­பாட்­டில் இருக்­கும் அனைத்து நினை­வி­டங்­க­ளை­யும் அருங்­காட்­சி­ய­கங்­க­ளை­யும் மூடும்­படி மத்­திய தொல்­லி­யல் துறை நேற்று முன்­தி­னம் உத்­த­ர­விட்­டது.

மே 15ஆம் தேதி வரை இந்த நினை­வுச் சின்­னங்­கள் மூடப்­பட்­டி­ருக்கும் என்­றும் அடுத்த உத்­த­ரவு வரும் வரை இது தொட­ரும் என­வும் தெரி­வித்­தி­ருந்­தது.

இந்­நி­லை­யில், தமி­ழ­கத்­தில் இந்த தொல்­லி­யல்­து­றை­யின் கட்­டுப்­பாட்­டின்­கீழ் இருக்­கும் தஞ்சை பெரிய கோயில், மாமல்­ல­பு­ரம் கடற் கரைக் கோவில் உள்­ளிட்ட கோவில்­களும் நினை­வி­டங்­களும் மூடப்­படு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தஞ்­சா­வூர் பெரிய கோயி­லின் நான்கு நுழை­வா­யில்களும் தடுப்­பு­கள் வைத்து மூடப்பட்­டுள்­ள­தால் பக்­தர்­கள் சாமி தரி­ச­னம் செய்ய முடி­யா­மல் ஏமாற்றத்­து­டன் திரும்­பிச் சென்­ற­னர்.

எனி­னும், கோயி­லுக்­குள் வழக்­க­மான பூஜை­கள் நடை­பெ­றும் என்­றும் கோயில் பணி­யா­ளர்­கள், சிவாச்­சா­ரி­யர்­க­ளுக்கு மட்­டுமே கோயி­லுக்­குள் அனு­மதி அளிக்கப்­படும் என்­றும் அறி­விக்கப்பட்டுள்ளது.

அதே­போல், செங்­கல்­பட்டு மாவட்­டத்­தில் உள்ள மாமல்­ல­பு­ரம் சுற்­று­லாத் தலங்­களும் மே மாதம் 15ஆம் தேதி வரை மூடப்­ப­டு­வ­தாக தொல்­லி­யல்­துறை அறி­வித்­துள்­ளது. அதன்­படி கடற்­கரை கோயில், ஐந்து ரதம், வெண்­ணெய் உருண்டை உள்­ளிட்ட அனைத்து இடங்­க­ளின் நுழை­வா­யில்­களும் அடைக்­கப்­பட்­டுள்­ளன. பய­ணி­கள் வருகை குறைந்­த­தால் மாமல்­ல­புர சுற்­று­லாத்­த­லமே வெறிச்­சோ­டிக் காணப்­படு­கிறது.