2,000 சிறுவர்களுக்கு தொற்று

2,000 சிறுவர்களுக்கு தொற்று

2 mins read
c64a573f-032a-444f-812a-162a6ccac401
-

சென்னை: தமி­ழ­கத்­தில் அதி­க­ரித்து வரும் கொரோனா பாதிப்பு சிறு­வர்­க­ளை­யும் விட்­டு­வைக்­க­வில்லை. அண்­மைய நாட்­க­ளாக ஒவ்­வொரு நாளும் நூற்­றுக்கு மேற்­பட்ட சிறு­வர்­களை கிருமி தொற்றி வரு­கிறது.

கடந்த ஆண்டு பர­விய கொரோனா கிருமி சிறு­வர்­களை அதி­க­ள­வில் பாதிக்­க­வில்லை. இந்த நிலை­யில் தற்­போது 2வது அலை­யாக வேக­மா­கப் பர­வும் கிரு­மித்­தொற்று 12 வய­துக்­குட்­பட்ட சிறு­வர்­களை அதி­க­ள­வில் பாதிப்­புக்­குள்­ளாக்கி முடக்கி உள்­ளது. கடந்த பத்து நாட்­களில் 12 வய­துக்­குட்­பட்ட 2,000 சிறு­வர், சிறு­மி­கள் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

ஏப்­ரல் 8ஆம் தேதி 132 சிறு­வர்­கள் ஒரே­நா­ளில் பாதிக்­கப்­பட்ட நிலை­யில் மறு­நாள் அது 161ஆக அதி­க­ரித்­தது. ஏப்­ரல் 10ஆம் தேதி 183 பேரும் 11ஆம் தேதி 203 பேரும் 12ஆம் தேதி 250 பேரும் பாதிக்­கப்­பட்­ட­னர். அடுத்­த­டுத்த நாட்­களில் இந்த பாதிப்பு மேலும் அதி­க­ரித்­தது. ஏப்­ரல் 13ஆம் தேதி­யன்று 225 சிறு­வர்­கள் பாதிக்­கப்­பட்ட நிலை­யில் ஏப்­ரல் 14ஆம் தேதி 288 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர்.

இப்­படி படிப்­ப­டி­யாக உயர்ந்­து­கொண்டே சென்ற சிறு­வர்­க­ளின் கொரோனா பாதிப்பு ஏப்­ரல் 15ஆம் தேதி கொஞ்­சம் குறைந்­தது. அன்­றைய தினம் 256 பேர் பாதிக்­கப்­பட்டு இருந்­த­னர். அதற்கு மறு­நாள் ஏப்­ரல் 16ஆம் தேதி­யன்று 310 பேரும் ஏப்­ரல் 17 அன்று 319 பேரும் பாதிக்­கப்­பட்­ட­னர்.

சிறு­வர்­களை அதி­க­ள­வில் கொரோனா தொற்று பாதிக்­காது என்று சுகா­தா­ரத்­து­றை­யி­னர் கூறி இருந்த நிலை­யில் கடந்த 10 நாட்­களில் அதி­க­ள­வில் சிறு­வர்­கள் பாதிக்­கப்­பட்டு இருப்­பது சுகா­தா­ரத் துறை­யி­ன­ரை­யும் பெற்­றோர்­க­ளை­யும் அதிர்ச்சி அடை­யச் செய்­துள்­ளது. 12 வய­துக்கு உட்­பட்ட குழந்­தை­கள் வெளி­யில் செல்­லா­மல் பார்த்துக்கொள்ள வேண்­டும் என கூறும் மருத்­து­வர்­கள் அறி­கு­றி­கள் தென்­பட்­டால் உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்கு அழைத்து செல்ல வேண்­டும் என அறி­வு­றுத்­து­கின்­ற­னர்.

தமி­ழ­கம் முழு­வ­தும் கடந்த பத்து நாட்­களில் அன்­றாட கொரோனா பாதிப்பு படிப்­ப­டி­யாக அதி­க­ரித்து தற்­போது இரு­ம­டங்­காக அதி­க­ரித்­துள்­ளது. ஏப்­ரல் 8ஆம் தேதி­யன்று 4,276 பேர் பாதிக்­கப்­பட்டு இருந்­த­னர்.

இது படிப்­ப­டி­யாக உயர்ந்து ஏப்­ரல் 11ஆம் தேதி­யன்று 6 ஆயி­ரத்­தைக் கடந்­தது. 14ஆம் தேதி 7,000ஐ கடந்து 8,000ஐ எட்டி இருந்­தது. ஏப்­ரல் 16ஆம் தேதி­யன்று 8,443 பேரும் ஏப்­ரல் 17ஆம் தேதி­யன்று 8,344 பேரும் பாதிக்­கப்­பட்­ட­னர். ஆகக்கடை­சி­யாக ஒரே­நா­ளில் 9,344ஆக உயர்ந்­து­விட்­டது.