இரண்டாவது வாரமாக வெறிச்சோடிய மெரினா கடற்கரை

இரண்டாவது வாரமாக வெறிச்சோடிய மெரினா கடற்கரை

1 mins read
f52b3e97-485c-4c2c-83e9-f80bf6827c8a
-

சென்னை: கொரோனா பர­வல் அதி­க­ரித்து வரு­வ­தை­ய­டுத்து மெரினா கடற்­க­ரைக்குச் செல்ல வார இறுதி நாட்­களில் அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது.

இது­தொ­டர்­பாக தமி­ழக அரசு கடந்த வாரம் வெளி­யிட்ட அறி­விப்­பில், மெரி­னா­வுக்கு சனி மற்­றும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் பொது மக்­கள் செல்­வ­தற்கு தடை விதிக்­கப்­ப­டு­வ­தாக கூறப்­பட்டு இருந்­தது.

இத­னைத் தொடர்ந்து கடந்த வாரம் வார இறுதி நாட்­களில் மெரினா கடற்­க­ரைக்கு மக்­கள் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

இத­னால் மெரினா வெறிச்­சோடி காணப்­பட்­டது. இந்த நிலை­யில் 2வது வார­மாக நேற்­றும் நேற்று முன்­தி­ன­மும் மெரி­னா­வுக்­குச் செல்ல பொது­மக்­க­ளுக்­குத் தடை விதிக்­கப்­பட்­டது.

ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் மெரினா கடற்­கரை காலை­யி­லேயே களை­கட்­டி­வி­டும். நடைப்­ப­யிற்சி செல்­ப­வர்­கள் அதிக அள­வில் காணப்­ப­டு­வார்­கள். விடு­முறை நாள் என்­ப­தால் குடும்­பத்­தோடு பல­ரும் மெரி­னா­வுக்கு வந்து பொழு­தைப் போக்­கு­வார்­கள். ஆனால் நேற்று கொரோனா தடை கார­ண­மாக மெரினா கடற்­கரை ஆள் நட­மாட்­ட­மின்றி வெறிச்­சோடி காணப்­பட்­டது.

மெரினா கடற்­க­ரை­யில் பிர­தான சாலை­யான காம­ரா­ஜர் சாலை­யில் நடந்து செல்ல மக்­கள் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். கடற்­கரை சாலைக்­குச் செல்ல யாருக்­கும் அனு­மதி அளிக்­கப்­ப­ட­வில்லை.

அங்கு செல்­ல­மு­டி­யாத அள­வுக்கு சாலைக்­குச் செல்­லும் வழி­கள் மூடப்­பட்டு இருந்­தன. கடற்­

க­ரைக்கு யாரும் சென்­று­வி­டாத வகை­யில் போலி­சா­ரும் தீவிர கண்­கா­ணிப்­பில் ஈடு­பட்­ட­னர்.