சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகுந்த வீரியத்துடன் பரவிவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
சென்னை காவல்துறையில் கொரோனா முதல் அலையில் 3,300 பேர் பாதிக்கப்பட்டு மீண்டனர்.
தற்போது பரவி வரும் 2வது அலையில் சென்னை காவல்துறையில் 100 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
இந்நிலையில், சென்னை யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் கடந்த 9ஆம் தேதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்துவிட்டதாகத் தக வல் வெளியாகி உள்ளது.

