சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இளையருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இளையருக்கு 20 ஆண்டு சிறை

2 mins read
8a557f5e-2a89-47a2-9bdf-1af2747d21cb
கோவை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளி ஜெகன். படம்: தமிழக ஊடகம் -

ஈரோடு: சிறு­மிக்குப் பாலி­யல் தொந்­த­ரவு கொடுத்த இளை­ஞ­னுக்கு 20 ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை விதித்து ஈரோடு மகிளா நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

ஈரோடு மாவட்­டம் சத்­தி­ய­மங்­க­லம் அடுத்த பவா­னி­சா­கர் பகு­தி­யைச் சேர்ந்த இளை­யர் ஜெகன், 19. பத்­தா­வது படித்து விட்டு ஊர் சுற்றி வந்த ஜெகன், 2019 பிப்­ர­வரி மாதம் தனது வீட்­டின் அருகே விளை­யா­டிக்­கொண்­டி­ருந்த நான்கு வயது சிறு­மியை விளை­யாட்­டுப் பொருட்­களைக் காட்டி வீட்­டிற்­குள் அழைத்­துச் சென்று பாலி­யல் ரீதி­யாக துன்­பு­றுத்­தி­யுள்­ளார்.

வீட்­டிற்­குச் சென்ற சிறுமி நடந்­ததை தனது பெற்­றோ­ரி­டம் கூறி­யுள்­ளார்.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்­றோர், ஜெகன் மீது சத்­தி­ய­மங்­க­லம் அனைத்து மக­ளிர் காவல்­நி­லை­யத்­தில் புகார் அளித்த நிலை­யில் போக்சோ சட்­டத்­தின்­கீழ் இளை­யர் கைது செய்­யப்­பட்­டார்.

இந்த வழக்கு மீதான விசா­ராணை ஈரோடு மாவட்ட மகிளா நீதி­மன்­றத்­தில் நடை­பெற்று வந்­தது. விசா­ரணை முடிந்த நிலை­யில் சனிக்கிழமை தீர்ப்பு வழப்­பட்­டது.

நான்கு வயது சிறு­மிக்குப் பாலி­யல் தொந்­த­ரவு கொடுத்த குற்­றத்­திற்­காக ஜெக­னுக்கு 20 ஆண்­டு­கள் சிறை­த்தண்­டனை விதித்­தும் 5,000 ரூபாய் அப­ரா­தம் விதித்­தும் நீதி­பதி மாலதி தீர்ப்பு வழங்­கி­னார்.

ஜெகன் அப­ரா­தத் தொகை­யைக் கட்­டத் தவ­றி­னால் மேலும் மூன்று மாதம் சிறைத் தண்­டனை அனு­ப­விக்­க­வும் நீதி­பதி உத்­த­ர­விட்­டார். மேலும், பாதிக்­கப்­பட்ட சிறு­மிக்கு பாலி­யல் தொந்­த­ர­வால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட நிதி­யி­லி­ருந்து ஒரு லட்­சம் ரூபாய் வழங்க வேண்­டு­மெ­ன­வும் தமி­ழக அர­சுக்கு நீதி­பதி பரிந்­துரை செய்­தார்.

தீர்ப்பு வழங்­கப்­பட்ட பின்­னர் கோவை மத்­திய சிறைச்­சா­லைக்கு ஜெகனை போலி­சார் அழைத்­துச் சென்­ற­னர்.