திருப்பூர்: திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த வட
மாநிலத்தைச் சேர்ந்த 19 பெண் தொழிலாளர்கள் நேற்று மீட்கப்பட்டனர். விருப்பத்துக்கு மாறாகப் பெண்களைத் தங்கவைத்திருந்த பின்னலாடை நிறுவன உரிமையாளரான நந்தா, 40, என்பவரை தொழி லாளர் நலத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

