நன்றி தெரிவித்த விவேக் மனைவி
சென்னை: மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி (படம்) நேற்று செய்தியாளர்களிடம் பேசி னார். அப்போது அவர், "என் கணவரை இழந்திருக்கும் இந்த நேரத்தில் பக்கபலமாகவும் உறு துணையாகவும் நின்ற மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி. அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கை நடத்தியதற்கு நாங்கள் என்றைக்கும் நன்றி யுடன் இருப்போம். இது என் கணவருக்குக் கிடைத்த மிகப்பெரிய கெளரவம்," என்று கூறினார்.
விவேக் மரணம்: அமைச்சர் விளக்கம்
சென்னை: நடிகர் விவேக் இறந்ததற்கு கொரோனா தடுப்பூசி காரணம் என சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து கூறியுள்ளார். "இதுபற்றி ஏற்கெனவே சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். மருத்துவமனை நிர்வாகமும் தேவையான விளக்கத்தை அளித்துள்ளது. தடுப்பூசியால் எந்த பக்கவிளைவும் இல்லை என்பதை பலமுறை விளக்கியுள்ளோம்," என்று கூறியுள்ளார்.
விமான இருக்கைக்கு அடியில்
ஆறு கிலோ தங்கக் கட்டிகள்
ஆலந்தூர்: துபாயிலிருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து சென்னை அனைத்துலக விமான நிலைய சுங்கத் துறை ஆணையர் ராஜன் சவுத்ரி தலைமையில் அதிகாரிகள் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. துபாயிலிருந்து வந்திறங்கிய விமானத்திற்குள் அவர்கள் சோதனை செய்தபோது ஓர் இருக்கை சற்று தூக்கியபடி இருந்தது. அதனைச் சரிசெய்ய முயன்றபோது அடியில் இரண்டு பொட்டலங்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டனர். அந்தப் பொட்டலங்களில் ஆறு தங்கக் கட்டிகள் இருந்தன. அதன் எடை ஆறு கிலோ என்றும் அவற்றின் மதிப்பு ரூ.2 கோடியே 90 லட்சம் என்றும் சுங்கத் துறையினர் மதிப்பிட்டனர். இவற்றைக் கடத்தி வந்தது யார் என்று அதிகாரிகள் விசாரிக்கத் தொடங்கி உள்ளனர்.
நீண்டதூரப் பேருந்துகள் குறைப்பு
சென்னை: கொரோனா கிருமி மீண்டும் பரவிவரும் சூழ்
நிலையில் பயணிகளின் வருகை குறைந்துள்ளதால் நீண்ட தூரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கணிசமான அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பேருந்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் நீண்டதூரப் பேருந்துகளில் 25% நிறுத்தப்பட்டு உள்ளன.

