அதிமுக, திமுகவுக்கு கபசுரக் குடிநீர் வழங்க அனுமதி

அதிமுக, திமுகவுக்கு கபசுரக் குடிநீர் வழங்க அனுமதி

1 mins read
8ec05255-bd59-4c1c-8d88-9ca7b3ce956d
-

சென்னை: கொரோனா கிரு­மித் தொற்­றின் இரண்­டா­வது அலையின் வேகம் தொடர்ந்து நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரும் நிலை­யில், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக்கவசம், நீா் மோர் வழங்கி தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட அதிமுக, திமுக ஆகிய கட்சி களுக்குத் தோ்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

தனி­ம­னித இடை­வெ­ளி­யு­டன் முகக்கவ­சம் அணிந்து பொது­மக்­க­ளுக்கு கப­சு­ரக் குடி­நீர், முகக்­க­வ­சத்தை வழங்­கிட வேண்­டும் எனவும் ஆணையம் அறி­வு­றுத்தி உள்­ளது.

இதைத்தொடர்ந்து திமுக, அதிமுக தொண்­டர்­கள் கப­சு­ரக் குடி­நீர் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

"கொரோனா இரண்­டா­வது அலை­யி­லி­ருந்து மக்­க­ளைக் காக்க திமுக வேட்­பா­ளர்­களும் தொண்டர் களுடன் இணைந்து சேவை புரிய வேண்­டும்," என அக்­கட்­சி­யின் தலை­வர் மு.க.ஸ்டா­லின் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

அதிமுகவின் செய்தித்தொடர் பாளா் பாபு முருகவேல் வெளியிட் டுள்ள தகவலில், "ஆண்டுதோறும் அதிமுக சாா்பில் தமிழகத்தில் நீா் மோா் பந்தல்கள் திறக்கப்படும். தற்போது தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் நீர் மோா், கபசுரக் குடிநீா், முகக்கவசம், கிருமி நாசினியை மக்களுக்கு வழங்கு வதற்குத் தோ்தல் ஆணையம் அதி முகவுக்கு அனுமதி அளித்துள்ளது," என்றார்.