சென்னை: சென்னை ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாமல் காணப்படும் பயணிகளிடம் ரூ.500 அபராதம் விதித்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தலைநகர் சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள், போக்கு வரத்து போலிசார் உள்ளிட்டோர் ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து ரயில் நிலையங்கள், ரயில்களில் பயணிகள் யாரேனும் முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டு அபராதம் விதித்து வருகின்றனர்.
ஒருபுறம் தொற்றுப் பரவலைத் தடுக்க தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், மறுபுறம், முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளைப் பொதுமக்கள் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

