சென்னை: கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் உறவினர்களே வீட்டில் பிரசவம் பார்த்ததால் தாயும் சேயும் பிரசவத்தின்போது உயிரிழந்தனர். சோழவரம் அடுத்த புதிய எருமை வெட்டிப்பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 30 குடும்பத்தினர் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இதில், கோபு என்பவரின் மனைவி பூஜா, 20, பாடியநல்லுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், பயத்தில் பூஜா, கடந்த 18ஆம் தேதி மருத்துவர்களிடம் தெரிவிக்காமல் அங்கிருந்து வெளியேறி, செங்கல் சூளைக்கு திரும்பி உள்ளார். வீடு திரும்பிய பூஜாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் உடன் இருந்தவர்களே பிரசவம் பார்த்ததில் தாயும் சேயும் உயிரிழந்தனர்.
வீட்டில் பிரசவம்: தாய்-சேய் பலி
1 mins read
-

