'இறந்தவரின் உடலை மாற்றிக் கொடுத்த மருத்துவமனை'

1 mins read
ad123433-fa20-4a79-a759-866f9781ca40
-

தேனி: தேனி அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் உயி­ரி­ழந்த இரண்டு முதியவர்­க­ளின் உடல்­கள் உற­வி­னர்களி­டம் மாற்­றிக் கொடுக்­கப்­பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. அதில் ஒருவரது உடலை அவ­சர அவ­சரமாக எரியூட்டி­விட்ட நிலையில், கலங்கி நின்­ற­ உறவி­னர்­கள் காவல்­நி­லை­யத்தை முற்­று­கை­யிட்­ட­னர்.

திண்­டுக்­கல் மாவட்­டம், நிலக்­கோட்டை பகு­தி­யைச் சேர்ந்தவர் அய்­யாவு, 71. இவர், கடந்த 16ஆம் தேதி, வத்­த­லக்­குண்டு பேருந்து நிலை­யத்­தில் உடல்­நிலை சரி­யில்­லா­மல் மயங்கி விழுந்­தார். பின்­னர், அவரை தேனி­யில் உள்ள மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­த­னர். இந்­நி­லை­யில், அவர் நேற்று முன்­தி­னம் இறந்­தார். உற­வி­னர்­கள் உடலை கேட்­கச் சென்­ற­போது அய்­யாவுவின் உடல் அங்கு இல்லை. விசார­ணை­யில் பெரி­ய­கு­ளம் அருகே இறந்­து­போன ராமு­வின், 75, உட­லுக்கு பதில் அவ­ரது உற­வி­னர்­க­ளி­டம் அய்­யா­வு­வின் உடலைக் கொடுத்­த­தும் அவர்­கள் இறு­திச் சடங்கு செய்து எரித்­த­தும் தெரி­ய­வந்­தது.