ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படும் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளிஒன்றில் தலைமை ஆசிரியையாக வேலை பார்க்கும் சோபனா, 42, என்பவர், 21 ஆண்டுகளுக்கு முன் தனது மதிப்பெண்களைத் திருத்தி அதை வைத்து ஆசிரியர் வேலையில் சேர்ந்தார் என்பது தெரியவந்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்தது.
நாவல்பூரைச் சேர்ந்த சோபனாவுக்கு எதிராக ஜி. இந்திரா என்ற கல்வித் துறை அதிகாரி போலிசில் புகார் செய்தார். அதிகாரிகள் சோபனா மீது வழக்குப் பதிந்தனர்.
சோபனா தலைமறைவாகிவிட்டார். தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து சோபனா இடை நீக்கம் செய்யப்பட்டார்.

