காரைக்கால்: முடிவெட்டாமலும் முகச்சவரம் செய்யாமல் தாடி வைத்துக்கொண்டும் திருமணம் செய்துகொள்பவர்களின் திருமணத்தில் தாங்கள் கலந்துகொள்ளப் போவதில்லை என்று காரைக்கால் மேடு மீனவக் கிராமப் பஞ்சாயத்து மக்கள் ஒரு வித்தியாச மான முடிவை அறிவித்துள்ளனர்.
இது மக்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
"திருமணத்தின்போது மணமகன் தாடி வைத்திருந்தால் அந்தத் திருமண விழாவில் பங்கேற்கமாட்டோம்," என்று காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்கால் மேடு மீனவக் கிராமப் பஞ்சாயத்தார் ஒரு முடிவு எடுத்திருந்த னர். நேற்று முன்தினம் இந்த பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தினர்.
கூட்டத்தின் முடிவில் இவர்கள் சில தீர்மானத்தையும் அறிவித்திருந்தனர்.
"காரைக்காலில் கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான திருமண விழாக்களில் மணமகன்கள் முடிவெட்டாமலும் முகச்சவரம் செய்யாமலும் திருமணம் செய்து கொள்கின்றனர். இது நமது பாரம்பரிய பண்பாடு இல்லை. இதுகுறித்து பெண் வீட்டாரோ, மாப்பிள்ளை வீட்டாரோ கவலைகொண்டதாகவும் தெரியவில்லை.
"நமது பாரம்பரிய பண்பாட்டின்படி திருமணத்தின்போது தாடி வைத்திருப்பது என்பது ஏற்புடையது அல்ல. எனவே, நமது பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் கிராம பஞ்சாயத்தார் ஒன்று கூடிப் பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளோம்.
"அதன்படி இனி வரும் காலங்களில் மணமகன் திருமணத்தின்போது தாடி வைத்திருந்தால், அந்தத் திருமண விழாவில் கிராமப் பஞ்சாயத்தார் யாரும் கலந்துகொள்வதில்லை என்று முடிவு செய்து இருக்கிறோம். இதைக் கிராமத்தினர் அனைவருக்கும் அறிவித்துவிட்டோம்,'' என்று குறிப்பிட்டுள்ளனர்.

