சென்னை: கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த அத்வைத் என்ற சிறுவன் 300 வண்ண மயமான 'க்யூப்'களைப் பயன்படுத்தி நடிகர் ரஜினிகாந்தின் உருவப்படத்தினை ஓவியமாக வடித்துள்ளார்.
இதை இணையத்தில் பதிவேற்றி உள்ள அத்வைத், "ரஜினிகாந்த் சார், 'ரூபிக் க்யூப்ஸ்' எனக்கு மிகவும் பிடிக்கும். 300 'க்யூப்'களைக் கொண்டு உங்கள் உருவப்படத்தை வடித்துள்ளேன். நீங்கள் இதை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்!'' என்று கூறிஇருந்தார்.
இந்தக் காெணாளி இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, கேரளச் சிறுவனுக்கு ரஜினிகாந்த் "மிகவும் அருமை, தனித் திறமை மிக்க படைப்பு," என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு சிறுவன் அத்வைத், பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதல்வர் பினராயி விஜயன், நடிகர்கள் மம்முட்டி, சுரேஷ்கோபி, சல்மான்கான், பாடகி சித்ரா உள்ளிட்ட பலரின் உருவப் படங்களையும் இந்த 'க்யூப்'களைப் பயன்படுத்தி வடித்துள்ளார்.

