இரவு ஊரடங்கால் ஒவ்வொரு நாளும் ரூ.15 கோடி இழப்பு

இரவு ஊரடங்கால் ஒவ்வொரு நாளும் ரூ.15 கோடி இழப்பு

2 mins read
e77da2c3-bf69-4178-b5ae-7536ee1f81a8
-

சென்னை: இரவு நேர ஊர­டங்­கின் கார­ண­மாக போக்­கு­வ­ரத்­துக் கழ­கங்­க­ளுக்கு சரா­ச­ரி­யாக ஒரு நாளைக்கு ரூ.12 கோடி முதல் ரூ.15 கோடி வரை இழப்பு ஏற்­பட்டு வரு­வ­தாக தமி­ழக போக்­கு­வ­ரத்து துறைச் செய­லா­ளர் சி.சம­ய­மூர்த்தி கூறி­யுள்­ளார்.

தமி­ழ­கத்­தில் மீண்­டும் கிரு­மிப் பர­வல் அதி­க­ரிக்­கத் தொடங்கி உள்­ளதை அடுத்து, கடந்த 20ஆம் தேதி இரவு 10 மணி முதல் அதி­காலை 4 மணி வரை இரவு நேர ஊர­டங்கு அம­லில் இருந்து வரு­கிறது.

இதன் கார­ண­மாக, போக்கு வரத்­துக் கழ­கங்­க­ளுக்கு அன்­றா­டம் ஏற்­படும் இழப்பு, தடுப்­பூசி செலுத்­திக்கொள்­வோ­ரின் எண்­ணிக்கை விவ­ரம், போக்­கு­வ­ரத்­தில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள மாற்­றங்­கள் குறித்து சி.சம­ய­மூர்த்தி நியூஸ் 18 ஊட­கத்­துக்கு விளக்­கம் அளித்­துள்­ளார்.

சென்னை மாந­க­ரப் போக்கு வரத்­துக் கழ­கத்­தில் பணி­யாற்­றும் பணி­யா­ளர்­க­ளுக்கு பல்­ல­வன் சாலை­யில் நேற்று தடுப்­பூசி போடும் பணி தொடர்ந்­தது.

இந்­தப்­ப­ணியை நேரில் பார்­வை­யிட்டு ஆய்வு செய்த பின்­னர் அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­போது, "தமிழ்­நாடு அர­சுப் போக்­கு­வ­ரத்­துக் கழ­கத்­தின் கீழ் மாநி­லம் முழு­வ­தும் பணி­பு­ரி­யும் 45 வய­தைக் கடந்த அனைத்து ஓட்­டு­நர், நடத்­து­நர், தொழில்­நுட்­பப் பணி­யா­ளர்­க­ளுக்கு கொரோனா தடுப்­பூசி போடப்­பட்டு வரு­கிறது.

"ஓட்­டு­நர், நடத்­து­ந­ருக்கு நோய்த்­தொற்று ஏற்­பட்­டால் பேருந்­தில் பய­ணிக்­கும் மற்ற பய­ணி­க­ளுக்­கும் பரவ வாய்ப்­புள்­ளது.

"தமி­ழ­கத்­தில் 70,000க்கும் மேற்­பட்ட 45 வய­தைக் கடந்த ஓட்­டு­நர், நடத்­து­நர்­கள் பணி­யாற்றி வரு­கின்­ற­னர். அவர்­களில் 25,459 பேருக்குத் தடுப்­பூசி போடப்­பட்டு ஏறக்குறைய 37%ஐ எட்­டி­யுள்­ளோம்.

"தடுப்­பூசி போடும் பணியை படிப்­ப­டி­யா­கத் தீவி­ரப்­ப­டுத்தி வரு­கி­றோம். ஒன்று அல்­லது இரண்டு வாரத்­தில் அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி போடப்­பட்டுவிடும்.

"இர­வு­நேர ஊர­டங்­கால் பேருந்து போக்­கு­வ­ரத்து பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­கா­ர­ண­மாக போக்­கு­வரத்­துக் கழ­கங்­க­ளுக்கு ரூ.15 கோடி வரை இழப்பு ஏற்­பட்டு வரு­கிறது," என்று கூறி­யுள்­ளார்.