சென்னை: மாநிலத்தில் ஞாயிறு தோறும் பொது ஊரடங்கு அமலில் இருக்கும் என்றாலும், மக்கள் தாங்கள் முன்கூட்டியே திட்ட மிட்டபடி திருமணத்தை ஆலயங் களில் நடத்தலாம் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
"திருமணத் தேதியை வேறொரு தேதிக்கு ஒத்திப்போடுவதற்கான அவசியம் இல்லை. ஆனால் இந்த திருமண வைபவத்தில் 20 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்," என்று அதிகாரிகள் கூறியுள்ளதாக தினத்தந்தி ஊடகம் தகவல் வெளியிட்டு உள்ளது.
"வரும் 25ஆம் ேததி ஞாயிறன்று சுபமூகூர்த்த நாள் என்பதால் திருமணங்கள் அதிக அளவில் நடக்க உள்ளன. கோவில்களில் திருமணம் நடத்த ஏற்கெனவே முன்பதிவு செய்துள்ளவர்கள் திட்டமிட்டபடி திருமணத்தை நடத்திக்கொள்ளலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், திருமணத்தில் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம். அனைவரும் முகக்கவசம் அணிந்து வருவதுடன், சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும். திருமணத்துக்கு வருபவர்கள் திருமண அழைப்பிதழையும் கையில் கொண்டு வரவேண்டும்," என்று அறநிலையத்துறை அதி்காரிகள் கூறியுள்ளனர்.

