மே 2 நள்ளிரவுக்குள் தேர்தல் முடிவை அறிவிக்க திட்டம்

மே 2 நள்ளிரவுக்குள் தேர்தல் முடிவை அறிவிக்க திட்டம்

2 mins read
3b705357-7fe8-433c-b20e-3a4dfc69bae9
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், வாக்குச்சாவடிகளில் செய்யவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்றும் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினார். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தின் 234 தொகு­தி­க­ளி­லும் ஏற்கெனவே திட்டமிட்டபடி மே 2ஆம் தேதி வாக்­கு­கள் எண்ணும் பணி நடை­பெ­றும் என்று தமி­ழ­கத் தலை­மைத் தேர்­தல் அதி­காரி சத்­ய­பி­ரத சாகு தெரி­வித்­துள்­ளார்.

"வாக்குகளை எண்ணி முடிக் கும் பணி சற்று தாமதமாகலாம். ஆனால், நள்­ளி­ரவு 12 மணிக்­குள் ஒட்டுமொத்த வாக்­கு­க­ளை­யும் எண்ணி முடித்து, இறுதி முடிவை அறி­விக்­கத் திட்டமிட்டுள்­ளோம்," என்று அவர் மேலும் கூறி­னார்.

"கிரு­மிப் பர­வ­ல் காரணமாக வாக்கு எண்­ணிக்­கையை ஒத்­தி­வைப்­பது குறித்து தற்­போது வரை எந்த ஓர் ஆலோ­ச­னை­யையும் நடத்­த­வில்லை," என்­றும் தேர்தல் அதிகாரி கூறியுள்­ள­தாக தமி­ழக ஊட­கங்­கள் ­தெரிவித்துள்­ளன.

சென்னை தலை­மைச் செயலகத்­தில் நடந்த ஆலோசனைக் கூட்டத் தின் போது செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­துப் பேசி­ய­வர், "கொரோனா பர­வ­லைத் தடுக்க இரவு நேர ஊர­டங்­கும் முழு நேர ஊர­டங்­கும் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால், இந்த ஊர­டங்­கு­களால் வாக்கு எண்­ணிக்­கை­யில் எந்த ஒரு பாதிப்­பும் ஏற்­ப­டாது. மே 2ஆம் தேதி காலை 8.30 மணிக்குத் தொடங் கும் வாக்கு எண்­ணும் பணியை நள்ளிரவுக்­குள் முடித்து அனைத்து முடி­வு­களையும் அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­கத் திட்டமிட்டுள்ளோம்.

"வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அதி­கா­ரி­க­ளுக்­கும் முக­வர்­களுக்­கும் கொரோனா பரி­சோதனை, தடுப்­பூசிகள் போடு­வது குறித்­து ஆலோ­சித்து வரு­கிறோம்.

"ஒரு சில கட்­டுப்­பா­டு­களும் வாக்கு எண்­ணும் ஊழி­யர்­க­ளுக்­கும் அரசியல் கட்சி வேட்பாளர் களுக்கும் அறிவிக்­கப்­படும்.

"அவற்றை அனை­வ­ரும் கடைப்­பி­டித்து வாக்கு எண்­ணிக்கைக்கு ஒத்­து­ழைப்பு வழங்கவேண்­டும்," என்­று சத்­ய­பி­ரத சாகு வேண்­டு­கோள் விடுத்­திருப்பதாக ெவப் துனியா ஊடகத் தகவல் குறிப்பிட் டுள்ளது.

அத்துடன், மின்­னணு வாக்­குப்­பதிவு இயந்­தி­ரங்­கள் வைக்­கப்­பட்­டுள்ள கட்­ட­டங்­களில் ரக­சி­ய­மாக கொள்கலன் உள்­ளிட்ட வாக­ னங்களோ, சந்தேகப்படும்படியான ஆட்களோ யாரும் நுழை­ய­வில்லை என்றும் இயந்திரங்­கள் அனைத்­தும் பாது­காப்­பாக இருக்­கின்­றன என்றும் அவர் கூறி­யுள்­ளார்.

இத­ற்­கிடையே வாக்கு எண்­ணிக்­கைக்குப் பயன்­ப­டுத்­தும் மேசை­களைக் குறைக்கக் கூடாது என மார்க்­சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செய­லர் பால­கி­ருஷ்­ணன் தமி­ழக தலைமைத் தேர்­தல் அதி­கா­ரிக்கு மனு அனுப்­பி­யுள்­ளார்.