மாநில அரசு: தமிழகத்தில் ஆக்சிஜன், ரெம்டெசிவர் மருந்துகளுக்கு தட்டுப்பாடில்லை

மாநில அரசு: தமிழகத்தில் ஆக்சிஜன், ரெம்டெசிவர் மருந்துகளுக்கு தட்டுப்பாடில்லை

1 mins read
a3df554a-837c-4972-a97e-658411f49bf5
-

சென்னை: தமி­ழ­கத்­தில் ஆக்­சிஜன், வெண்­டி­லேட்டா், ரெம்­டெசிவா் ஆகி­ய­வற்­றிற்கு இது­வரை பற்­றாக்­குறை எது­வும் ஏற்­பட வில்லை என்று சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் தமி­ழக அரசு விளக்­கம் அளித்­துள்­ளது.

ஆக்­சி­ஜன் உற்­பத்தி தேவைக்­கும் கூடு­த­லாக இருப்­ப­தால் ஆந்­திரா, தெலுங்­கா­னா­வுக்கு வழங்­கப்­பட்­டதாகவும் அரசு மேலும் கூறி­யுள்­ளது.

ரெம்­டெ­சி­வர் மருந்­து­கள் தனி நபர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வ­தா­க­வும் தமி­ழக அர­சின் அனு­ம­தி­யைப் பெறா­மல் வெளி­மா­நி­லங்­க­ளுக்கு ஆக்­சி­ஜன் அனுப்­பப்­ப­டு­வ­தா­க­வும் வெண்­டி­லேட்­டர் பற்­றாக்­குறை உள்­ள­தா­க­வும் நாளி­தழ்­களில் வெளி­யான செய்­தி­க­ளின் அடிப்­ப­டை­யில், உயர் நீதி­மன்ற தலைமை நீதி­பதி அமர்வு தாமாக முன்­வந்து பொது நல வழக்­காக விசா­ரித்­தது.

இதற்கு, அரசு அளித்துள்ள விளக்கத்தில், "மாநி­லத்­தில் ஆக்சி­ ஜ­னுக்கு தட்­டுப்­பாடு இல்லை. தமி­ழ­கத்­தில் நாள் ஒன்­றுக்கு 400 மெட்­ரிக் டன் ஆக்­சி­ஜன் உற்­பத்தி செய்­யப்­படுகிறது. இதில், தினமும் 250 மெட்­ரிக் டன் ஆக்­சி­ஜன் மட்­டுமே பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறது.

"ஆந்­திரா, தெலுங்­கானா மாநி­லங்­க­ளுக்கு 65 மெட்­ரிக் டன் ஆக்­சி­ஜன் வழங்­கி­ய­தால் தமிழகத்­திற்கு எந்த பாதிப்­பும் இல்லை.

"தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் ரெம்­டெ­சி­விர் மருந்து கையி­ருப்பு இல்லை என்­றால் அர­சி­டம் பணம் செலுத்­திப் பெற்­றுக்­கொள்­ள­லாம்,

"அரசு மருத்­து­வ­ம­னை­களில் உள்ள 9,600 வெண்­டி­லேட்­டர்­களில் 5,887 வெண்­டி­லேட்­டர்­கள் மட்டுமே சிகிச்­சைக்கு பயன்­படுத்­தப்­பட்டுள் ளன," ­என்று அரசு உயர்­நீ­தி­மன்­றத்­தில் தெரி­வித்­தது.

வழக்கு விசா­ரணை மீண்­டும் நாளை மறுநாள் 26ஆம் தேதிக்கு ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.