ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

2 mins read
37530659-f144-4e15-9571-063f0f04f871
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. படம்: தமிழக ஊடகம் -

தூத்­துக்­குடி: தூத்­துக்­கு­டி­யில் உள்ள ஸ்டெர்­லைட் ஆலையை மீண்­டும் திறக்­க­விட மாட்­டோம் என்று கூறி பொது­மக்­கள் தங்க ளின் எதிர்ப்பை நேற்று பதிவு செய்­த­னர்.

"வேதாந்தா என்ற கொரோனா எங்­கள் தலை­மு­றை­யையே அழித்து விடும். ஆக்­சி­ஜன் தட்­டுப்­பாட்டை கார­ணம் காட்டி ஸ்டெர்­லைட் ஆலை­யைத் திறப்­ப­தற்கு நாங்­கள் அனு­ம­திக்க மாட்­டோம்," என்று இந்த ஆலை திறப்பை எதிர்ப்­ப­வர்­கள் கூறி­னர்.

ஆக்­சி­ஜன் உற்­பத்­திக்­காக மட்­டும் மீண்­டும் ஸ்டெர்­லைட் ஆலை­யைத் திறக்­க­லாம் என்று மத்­திய அரசு உச்ச நீதி­மன்­றத்­தில் சம்­ம­தம் தெரி­வித்­தி­ருந்­தது.

இந்­நி­லை­யில், தூத்­துக்­குடி மாவட்ட ஆட்­சி­யர் செந்­தில்­ரா­ஜின் தலை­மை­யில், ஸ்டெர்­லைட் ஆலையை மீண்­டும் திறக்க அனு­ம­திக்­க­லாமா என்­பது குறித்து தூத்­துக்­குடி மக்­க­ளி­டம் கருத்­துக் கேட்­புக் கூட்­டம் நேற்று நடத்­தப்­பட்­டது.

பொது­மக்­களில் சிலர் ஸ்டெர்­லைட் ஆலை­யைத் திறக்க அனு­ம­திக்­க­லாம் என்று கூறி­னா­லும் போராட்­டக்­கு­ழு­வி­னர் அதை திறக்க அனு­ம­திக்­கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரி­வித்து வாக்­கு­வா­தம் செய்­த­தா­க­வும் 'ஸீ நியூஸ்' ஊட­கத் தக­வல் தெரி­வித்திருந்தது.

சுற்­றுச்­சூ­ழல் பாதிப்பு ஏற்­ப­டு­கிறது என்­றும் அந்­தப் பகுதி மக்­கள் தற்­போ­து­தான் நிம்­ம­தி­யாக வாழ்­கின்­ற­னர் என்­றும் இதன் கார­ண­மாக ஆலையை மீண்­டும் திறக்க அனு­ம­திக்­கக் கூடாது என்­றும் போராட்­டக்­கு­ழு­வி­னர் கூறி­னர்.

வேதாந்தா நிறு­வ­னம் உச்ச நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­தி­ருந்த மனு­வில், "தூத்­துக்­கு­டி­யில் மூடப்­பட்­டுள்ள ஸ்டெர்­லைட் ஆலை­யில் உள்ள ஆக்­ஸி­ஜன் உற்­பத்­திக் கூடத்­தில் நாள் ஒன்­றுக்கு 500 டன் ஆக்­ஸி­ஜன் தயா­ரிக்க முடி­யும். அதை தயா­ரித்து இல­வ­ச­மாக வழங்க அனு­ம­திக்க வேண்­டும்," எனக் குறிப்­பிட்­டி­ருந்­தது.

இந்த மனு 23ஆம் ேததியான நேற்று உச்ச நீதி­மன்­றத்­தில் விசா­ர­ணைக்கு வந்த அதே சம­யத்­தில் தூத்­துக்­கு­டி­யில் கருத்­துக் கேட்புக் கூட்­டம் நடந்­தது.